புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 02, 2024)

வழுவாதடி உறுதியாய் இருங்கள்

1 தீமோத்தேயு 6:12

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப் பட்டாய்;


இன்றைய நாட்களிலே விசுவாச மார்க்கத்தார் மத்தியிலே, பணத்தைக் குறித்த உபதேசமானது பெரும் விவாதங்களுக்கும், விமர்சனங்களு க்கும் உள்ளாகியிருக்கின்றது. நாம் கடந்த நாட்களிலே தியானித்த பிரகாரம், சில விசுவாச மார்க்கத் தார், உலக ஐசுவரியத்தின் பெருக் கம் யாவும் தேவ ஆசீர்வாதம் என் றும், ஐசுவரியம் பெருகும் போது, ஐசுவரியத்தை இன்னும் பெருக்க பல வழிகளை உண்டு பண்கிக் கொண்டு, தேவனை அறியாத உலக ஐசுவரியவான்களைப் போல வாழ் ந்து கொண்டு, தங்களுக்கு பண ஆசை இல்லை என்று கூறிக் கொள் கின்றார்கள். நாம் அவர்களுடைய நியாயாதிபதிகள் அல்ல. ஆனால், ஐசுவரியத்தை பெருக்கிக் கொண்டு, தங்களை விசுவாச மார்க்கத்தார் என்று கூறிக் கொள்கின்றவர்கள், தங்கள் வாழ்க்கையை ஆண்டவர் இயேசு கூறிய வார்த்தைகளின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பார்ப்பது அவர்களுக்கு நன்மையை உண்டாகும். ஆனால், நீங்களோ, எச்சரிக் கையுள்ளவர்களாக இருங்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேரா யிருக்கின்றது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிரு க்கின்றார்கள். அப்படியான வேதனைகளின் மத்தியிலே வாழ்ந்து கொண்டு, தாங்கள் சமாதானமாக வாழ்கின்றோம் என்று கூறிக் கொள்கி ன்றார்கள். நாம் போகும் வழியிலே உலக ஆசை இச்சைகளினாலே உண்டாகும் வேதனைகள் அநேகம் உண்டு என்ற அறிந்தால், அந்த வேதனைகளை உண்டாக்கும் வழிகளைவிட்டு நாம் சீக்கிரமாக விலக்கிக் கொள்ள வேண்டும். பணஆசை உங்களில் இருக்கின்றதா என்று நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள். அதைக் குறித்து இந்நாட்களிலே அதிகமாக தியானம் செய்வோம். 'நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.' வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகி மையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாச ற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவராகிய ஆண்டவராகிய இயேசு காட்டிய வழியிலே நடவுங்கள். அழியாத மேலான பொக்கி ஷத்தை நாடித் தேடுங்கள். அதையே மேன்மையாக எண்ணுங்கள். சத்திய ஆவியானவர் உங்களை வழிநடத்திச் செல்வாராக.

ஜெபம்:

இதுவரையும் என் கால்கள் வழுவாமல் காத்து வந்த தேவனே, செழிப்பின் உபதேசங்களால் நாம் இழுப்புண்டு போகாதபடிக்கு, விசுவாச த்திலே நிலைத்திருக்கும் இருயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யூதா 24ம் வசனம்