புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 24, 2024)

ஆத்துமாக்கள் அருமையானவைகள்

மத்தேயு 16:26

மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடு ப்பான்?


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன், தன் வாலிப நாட்களி லிருந்து தினமும் குடித்து வெறித்து, தகாத இச்சைகளை நடப்பித்து, தெருவிலே சண்டை பண்ணி, களவு செய்து, தூஷணமான வார்த்தைக்கை பேசி துன்மார்க்கமான வழியிலே வாழ்ந்து வந்தான். அவனை நெறிப்படுத்தும்படி அரச அதிகாரிகளால் அனுமதி பெற்ற ஆலோசகரொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அந்த வாலிபனை விடுதலையாக்கும்படிக்கான வழிமுறைகளை படிப்படியாக, அதற்கென்று நியமிக் கப்பட்ட நிலையத்திலே, பொறுமை யோடு செய்து வந்தார். அந்த ஆலோ சகருக்கு வாலிப பிராயத்திலுள்ள ஒரு மகனும், மகளும் இருந்தார்கள். அடிமைத்தன கட்டுகளிலே இருக் கும் அந்த மனிதனானவனை, அவர் தன்னுடைய வீட்டிற்குள் போக்கும் வரத்துமாக இருப்பதற்கு அனுமதிப்பாரோ? அல்லது அவன் தன்னு டைய வாலிப பிள்ளைகளோடு ஐக்கியமாக இருக்கும்படி பாராமுகமாக விட்டுவிடுவாரோ? நல்வழியிலே வாழும் தன்னுடைய பிள்ளைகளை குறித்து அவர் மிகவும் கவனமுள்ளவராக இருப்பார். சில ஆண்டுகளுக்கு பின்னர், அடிமைத்தன கட்டுகளிலே வாழ்ந்த அந்த மனிதனாவன், அவனுடைய முப்பதாவது வயதிலே, அவனுக்கு பன்னிரண்டு வருடமாக இருந்து வந்த அடிமைத்தன கட்டுகளிலிருந்து முற்றாக விடுதலைய டைந்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, அந்த நெறிப்படுத்தும் ஆலோசகர் பிரத்தியேகமான வேலைக்காக பிரித்தெடுக்கப்பட்டிருக்கின்றார். அதுபோலவே, சில ஊழியர்களும் சில பிரத்தியேகமான அழை ப்பை பெற்றிக்கின்றார்கள். அவர்களை கண்டு, நாமும் அவர்களைப் போல ஊழியம் செய்யலாம் என்ற எண்ணம் கொள்ள கூடாது. ஒருவனை இரட்சிப்புக்குள் நடத்த வேண்டும் என்று எண்ணி, நம்முடைய செயல்களால் இரட்சிப்படைந்த வேறு இருவரை பின்மார்க்கத்திற்கு தள்ளிவிடவோ அல்லது தன்னுடைய ஆத்துமாவையோ கெடுத்துக் கொள்ளக் கூடாது. கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவே, நாம் நற்கிரியைகளை செய்வதை நிறுத்திவிடக்கூடாது. ஆனாலும் நற்கிரியைகளை செய் கின்றவன், நற்கிரிகைகளை செய்வதற்காக மற்றய விசுவாச மார்க்கத் திலே உறுதியாய் இருப்பவர்களை தீயவழிக்குள் தள்ளுகின்றவனாகவும் மாறிவிடக்கூடாது. ஒருவனும் எண்ணவேண்டியதற்கு மிஞ்சி தன்னைக் குறித்து எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும். எனவே, தேவ ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு இடங்கொடுங்கள்.

ஜெபம்:

உம்முடைய சித்ததை நிறைவேற்றும் தேவனே, என்னுடைய கிரியைகள் ஒருபோதும் எந்த ஆத்துமாவையும் இடறல்படுத்தாமல் இருக்கும்படிக்கு என் மனக்கண்களை தூய்மையாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 17:12