புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 19, 2024)

இருதயத்தில் விழும் விதைகள்

கலாத்தியர் 6:8

தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்.


தெரு வழியாக சென்று கொண்டிருந்த வாலிபர்கள், ஒரு வீட்டின் பிற்புறமாக இருந்த பின் வளவிலே, ஒரு மாங்கனியின் விதையை எறிந்து விட்டு சென்று விட்டார்கள். நாட்கள் சென்ற பின்பு அந்த விதையானது முளைத்து தளிர்விட ஆரம்பித்தது. அந்த வீட்டின் சொந்தக்காரனோ, மற்றய மரங்களோடு அதுவும் வளரடும் என்று விட்டுவிட்டான். ஆண் டுகள் கடந்து சென்று, அந்த மரமானது வளர்ந்து கனிகளை கொடுத்தது. அவ்வழியாக செல்லும் மனி தர்கள் பார்த்து ஆச்சரியப்படத்தக்கதாக அந்த மரத்தின் கனிகளை பறித்து புசித்த யாவரும், இந்தக் கனியானது சுவை யற்றும், மிகவும் புளிப்புள்ளதாகவும் இருக்கின்றதே என்று வெறுப்போடு, அதை எறிந்து விட்டு, சென்றார்கள். அந்த மரத்தின் கனியை மனிதர்கள் சுவை பார் ப்ப தற்கு முன்னதாக, மரத்தின் தன்மைகள் யாவும் நன் றாகவே காட்சியளி த்தது. ஆனால், அந்த மரத்தின் கனியின் சுவையோ, இதுவரைக்கும் மனிதர்கள் அறியாதிருந்தபடிக்கு உள்ளே மறைந்திருந்த அந்த மரத்தின் உண்மையான தன்மையை வெளிக்காட்டியது. இன்று பலர் கர்த்தர் வெளிதோற்றத்தையல்ல, இருதயத்தைப் பார்கின்றார் என்று கூறிக் கொள்கின்றார்கள். அது உண்மையான கூற்று. அவ்வண்ணமாக கூறுகின்றவர்களின் கனிகள் சந்தைக்கு வரும்போது, அந்தக் கனிகளானது, அவர்கள் இருதயத்தில் என்ன இருந்தது என்பதை மனிதர்க ளுக்கு வெளிக்காட்டிவிடும். தேவனுக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை. ஆனால்;, தங்கள் வெளித்தோற்றங்களை நியாயப்படுத்தி, நீதி மான்களைப் போல தங்களை காண்பித்து வருகின்றவர்களின் வாழ்க்கையானது உண்மையாதோ அல்லது போலியானதோ என்பதை அவர் களின் வாழ்வில் வெளிப்படும் கனிகளால் உறுதிப்படுத்தப்படும். ஆண்டுகள் கடந்து செல்லலாம் ஆனால் தேவனின் வார்த்தையோ மாறாதவைகள். எனவே, தேவன் இருதயத்தைப் பார்கின்றார் என்று சொல்லுகின்ற எந்த மனிதனும், தன் இருதயத்தில் மறைந்திருப்பது என்ன என்பதைக் குறித்து மிகவும் எச்சரிக்கையுள்ளவனாக இருக்க வேண்டும். இருதயத்திலே நல்ல விதைகளான தேவ வார்த்தையானது விழுந்து முளைக் கட்டும். நாம் ஆவிக்கொன்று விதைத்து ஆவியினாலே நித்திய ஜீவனை அறுவடை செய்வோமாக.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, வாழ்வு தரும் வார்த்தைகள் என் உள்ளதில் விழுந்து முளைப்பதற்கு நான் இடங் கொடுக்கும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:19