புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 15, 2024)

மனதில் தோன்றும் ஆசைகள்

ஏசாயா 55:8

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.


மனிதர்களின் வாழ்வில் தங்கள் மனதின் ஆசைகள் நிறைவேறும் போது பெருமகிழ்ச்சியடைகின்றார்கள். அதனால் தாங்கள் போகும் வழி சரியானது எனவும், தாங்கள் செய்யும் காரியங்கள் சிறப்பானவைகள் எனவும் கருதி, அவ்வழியிலே சென்றுவிடுகின்றார்கள். ஒரு சிலர் அதை தேவனுடைய ஆசீர்வாதம் என சொல்லி தேவனைத் துதிக்கின்றார்கள். தங்கள் வழி வெற்றி தரும் வழி என்ற சொல்லி, இன்னும் பலரை தங்கள் வழிக்கு இழு த்துக் கொள்கின்றார்கள். ஆனால் எந்த மனிதனும், தன் மனதின் ஆசைகள் இந்த உல கத்தை சார்ந்தவைகலா அல் லது பரலோகத்தை சார்ந்தவை களா என்பதை வகுத்து அறி ந்து கொள்வது அவனுடைய ஆத்துமாவிற்கு நல்லது. இன்று விசுவாச மார்கத்திலுள்ள சிலரில், உலகத்தை சார்ந்த மனதின் ஆசைகள் மாம்ச இச்சைகளாக இருக்கின்றது என்பதை மறந்து போய்விடுகின்றார்கள். 'ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டான வைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கி றவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.' (1 யோவான் 2:16-17). மேலும், 'நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவ தும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.' (1 யோவன் 2:19). ஆண்டவராகிய இயேசுவை அறியாத நாட்களிலே வாழ் விலே பொருளாதார நெருக்கடிகள் மத்தியிலே, வாழ்ந்து வந்தவர்கள், ஆண்டவர் இயேசுவை அறிந்த பின்பு, தங்கள் வாழ்வில் வரும் அழை ப்புக்கள், உயர்வுகள், வசதிகள், புதிய உறவுகள், செல்வாக்குகள் யாவும், ஆண்டவர் இயேசுவினால் உண்டானவைகள் என்று கருதி விடு கின்றார்கள். பிரியமானவர்களே, இன்று சிலர், இந்த உலகத்தினாலுண்டான சில காரியங்களை தீங்கற்ற ஆசைகள் என்று சொல்லிக் கொண்டு, அவற்றை தங்கள் வாழ்விலே சேர்த்துக் கொள்கின்றார்கள். மனுஷனுக்கு செம்மையாக தோன்றும் வழிகள் எல்லாம் ஜீவ வழிகள் அல்ல. பெற்றுக் கொண்ட மேலான அழைப்பை மறந்து போய்விடாதிருங்கள். மனதின் ஆசைகளை தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து அறிந்து, பரலோகத்திற்குரியவைகளை பற்றிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

வாழ்வு தரும் ஜீவ வசனத்தை எனக்குத் தந்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டானவைகளை நான் ஒருபோதும் பின்பற்றி, வஞ்சிக்கப்பட்டு போய்விடாதபடிக்கு என்னை உம் வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங் 139:23-24