புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 12, 2024)

அழியாத முதலீடுகள்

மத்தேயு 6:21

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்


அழிவுள்ளவைகள் யாவும் ஒரு நாள் அழிந்து போகும். அவைகளை எவ்வளவாய் ஒரு மனிதன் பெருக்கினாலும், அவைகள் ஒன்றும் நிலை நிற்பதில்லை. நாம் காண்கின்ற இந்த உலகமானது வளர்ந்து அபிவி ருத்தி அடைந்து கொண்டு போகின்றது என்று மனிதர்கள் கருதுகின்றார்கள். அவர்களுடைய வரைவிலக்கணப்படி உலகமானது அபிவி ருத்தி அடைந்து கொண்டிருக்கின்றது. ஆனால், வானமும், பூமியும் அதிலுள்ள யாவும் அக்கினிக்கிரை யாக வைகப்பட்டிருக்கின்றது. கொஞ்சமாக சேர்த்தவன், சேர்த்த கொஞ்சத்தையும், அதிகமாக சேர்த்தவன், தான் சேர்த்த அதிகத்தையும் இழந்து போவான். அதிகமாய் சேர்த்து, தன் இருதயத்தை சேர்த்தவைகளின் மேல் வைத்திருக்கின்றவன் அதிகமாய் இழந்து போவதினாலே, அதிக வேதனை அடைவான். இன்று விசுவாசமார்கத்தார் என்று கூறிக் கொள்ளும் சிலரும், தேவனுடைய ஆசீர்வாதம் என்ற போர்வையிலே, இந்த உலகத்தின் பொருட்களை அதிகதிகமாய் பெருக்கிக் கொண்டு போகின்றார்கள். உங்களிடம் இருப்பதை விற்று பிச்சை கொடுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு நவீன விளக்கங்களை கொடுத்து, உலக பொருட் களை தங்களுடைய சந்ததிக்காக சேர்த்து வைத்துக் கொண்டு, ஏழை களுக்கு உதவுங்கள், எளியர்களுக்கு பெலனாயிருங்கள் என்று மற்றவர் களுக்கு உபதேசித்து. மற்றவர்களுடைய பொருட்களை சேர்த்து, ஏழை எளியவர்களுக்க உதவி செய்து, தங்கள் பெயர்களை மேன்மைப்படுத்திக் கொள்கின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள் என்றுசொன்ன ஆண்டவர் இயேசுவின் வார்த்தை கள் மாறாதவைகள். ஆனாலும், அவை யாவும் நம்முடைய தெரிவிலும், தீர்மானத்திலுமே தங்கியுள்ளது. ஒருவன் தன்னை ஆசீர்வதிக்கப்பட்டவன் என் கூறி சுகபோகமாக வாழ்ந்து, தன் சரீரத்தை நன்றாக பேணிக் பாதுகாத்து வந்தாலும், தேவன் முன்குறித்த நாளிலே, அவன் ஆவி பிரியும், அவன் சரீரம் மண்ணுக்கு திரும்பும். அவன் சேர்த்து வைத்த வைகள் அழிந்து போகும். உயிரோடிருக்கும் நாட்களில் ஞானமுள்ள அழியாத முதலீடுகளை செய்யவும், இந்த பூமியிலே வாழும் நாட்க ளிலே உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதும் என்கின்ற சிந்தை உங்களில் வளர்ந்து பெரு இடங் கொடுங்கள்.

ஜெபம்:

பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையு ங்கள்; என்று சொன்ன தேவனே, இந்த பூமியின் நிலையற்ற பொருட்களில் என் கண்களை பதிய வைக்காமல் வாழ ஞானமுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோசேயர் 3:1