புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 01, 2024)

'உன் ஒளி வந்தது'

ஏசாயா 60:1

எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.


பிரியமான சகேகாதரரே, நீங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூல மாய் தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்யும்படி, அந்தகார இரு ளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளிக்கு வரவழைக்கப்பட்டிருக் கின்றீர்கள் என்றும் நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பக லின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள் ளானவர்களல்லவே என்று பரிசு த்த வேதாகமம் தேவனுடைய பிள் ளைகளாகிய நம்மைக் குறித்து கூறுகின்றதைக் காணலாம். பக லின் பிள்ளைகள் வெளிச்சத்திலே நடப்பதினாலே, அவர்கள் தெளி ந்த புத்தியுள்ளவர்களாக இருந்து, இந்த உலகத்தின் மாயையான வழிகளிலே சிக்குண்டு இடறி விழாமல் இருக்கின்றார்கள். ஏனெனில் ஜீவ ஒளியாகிய தேவ வசனம், நம்முடைய கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாகயிருக்கின்றபடியால், பகலிலே நடமாடுகின்றவர்களைப் போல தீமையின் கண்ணிகளை தெளி வாக காண்கின்றோம். ஆனால் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களா யிருக்கின்றவர்கள் ஒளியை வெறுத்து, இருளைப் பற்றிக் கொள்வதால் போகும் வழியிலே இடறுகிறார்கள்;. நித்திய வாழ்வைக் அருளும் தேவ ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் அவர்களுடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் அந்த ஒளியைப் பார்க்கிலும், அந்தகார இருளின் கிரியைகளையே விரும்புகின்றதால், தங்கள் அழிவைத் தாங்களே தீர்மானித்துக் கொள்கின்றார்கள். ஆகை யால், பரிசுத்த வேதாகமம்கூறும் அறிவுரையின்படி மற்றவர்கள் இரு ளிலே தூங்குகிறதுபோல நாம் இருளிலே தூங்காமல், பகலுக்குரிய வெளிச்சத்தின் பிள்ளைகளைப்போல விழித்துக்கொண்டு தெளிந்தவர்க ளாயிருக்கக்கடவோம். ஆத்துமாவுக்கு விரோமமாக போர்செய்கின்ற மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள். தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் மற்றவர்களுடைய ஒளியிலே நடக்கின்றவர்களாக வாழாமல், தேவனுடைய ஜீவ ஒளியாகிய சத்திய வசனம் உங்களில் நிலைத்திரு க்கக்கடவது. திராட்சைசெடியாகிய இயேசுவில் ஒட்டப்பட்டு நிலைத்தி ருக்கின்ற கிளைகளாக நாம் எப்போதும் காணப்படவேண்டும். அந்த இணைப்பானது வேறுறொருவர் வழியாக உண்டாவதில்லை. நாம் இயேசு வோடு சேர்ந்திருப்பதற்கு இன்னுமொரு மத்தியஸ்தர் தேவையில்லை. நாம் ஒவ்வொருவரும், இந்த உலகத்திற்கு ஒளிவீசும் சுடர்களாக நியமி க்கப்பட்டிருக்கின்றோம்.

ஜெபம்:

இரட்சிப்படைவதற்கென்று என்னை நியமித்த தேவனேஇ நான் இருளிலே நடவாமல்இ ஜீவ ஒளியிலே நடக்கும்படிக்குஇ உம்முடைய திரு வசனத்திலே நிலைத்திருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9