புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 28, 2024)

பொல்லாங்கான சோதனைகள்

யாக்கோபு 1:13

தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.


எந்த ஒரு தகப்பனானவனும், தன் மகனானவன் வெறிகொள்வானோ என்று அறியும்படிக்கு தன் வீட்டிலே, மதுபானம் உள்ள போத்தல்களை வெளியரங்கமாக வைத்து தான் நேசிக்கும் பிள்ளையை சோதிப்பதில்லை. கருப்பொருளாவது, ஒரு நல்ல தகப்பனானவன் தீமையினாலே தன் பிள்ளைகளை சோதிப்பதில்லை. ஆனால், தன்னுடைய மகனாவன், தெரு வழியாக தன் நண்பர்களோடு போகும் போது, தெருவின் அப்புறத்திலே இருக்கும் மதுபான சாலைக்குள் தன் மகனானவன் போகாதபடிக்கு அவனுக்கு அறிவுரை கூறுவார். ஏனெனில், தீமையானது இந்த உலகத்திலே ஆளுகை செய்கின்றது. அந்த தீமையிலிருந்து தன்னுடைய மகனானவன் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில வேளைகளிலே அவனை தடுத்து நிறுத்துகின்றார். ஆனால், அந்த மகனானவன், தான் வயதிற்கு வந்து விட்டேன். நன்மை எது? தீமை எது? என்று பகுத்தறியும்படி எனக்கு நல்ல அறிவு இருக்கின்றது என்று கூறி, தன் தகப்பனானவனின் சொல்லை கேளாமல், தன் நண்பர்களோடு சேர்ந்து அந்த மதுபான சாலைக்கு சென்று வெறிகொள்வானாக இருந்தால், அவன் தனக்குண்டான இச்சையினாலே இழுப்புண்டு, தன்னை தானே சோத னைக்குட்படுத்திக் கொள்கின்றான். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் பாவம் செய்ய வேண்டும் என்று, பாவ சேற்றிலே விழுந்து கிடக்க வேண்டும் என்றும் பிதாவானவர் நம்மை சோதிப்பவரல்ல. மாறாக, பாவ சேற்றிலே விழுந்து விடுதலையடைய முடியாதிருக்கின்றவர்களை, மீட் கும்படியாகவே அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உல கத்திற்கு அனுப்பினார். எனவே, அசுத்தங்களில் சிக்குண்டு சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிற வரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவர் நன்மையான ஈவுகளையும் பூரணமான வரங்களையும் நமக்கு பரத்திலிருந்து அனுப்பி வைத்திருக்கின்றார். அதே வேளையில், பரம யாத்திரிகளாக இந்த உலகத்தை கடந்து கொண்டிருக்கும் நாம், பொல்லாங்கனின் தீமையான வஞ்சகத்திலே விழுந்து விடாதபடிக்கு, நல்ல ஆலோசனைகளை தம்முடைய வார்தை வழியாக தருகின்றார். அதை மீறி நடப்பவன், இச்சையானது தன்னை ஆளுகை செய்ய இடம் கொடுப்பதால், அவன் பாவம் செய்கின்றான். நீங்களோ தேவ வார்த்தையில் நிலைத்திருங்கள்.

ஜெபம்:

நன்மையான ஈவுகளை எனக்கு தருகின்ற நல்ல தகப்பனே, நான் என்னுடைய சுய இச்சைகள் என்னை ஆள இடங் கொடுக்காதபடிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 10:13