புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 20, 2024)

நல்ல போர்ச்சேவகன்

1 தெச 5:5

நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.


தன் பட்டணத்தின் வாசலை பாதுகாக்கும் ஒரு நல்ல போரச்சேவகன் எப்படியாக இருப்பான்? எப்போதும் விழிப்புள்ளவனாகவும், எச்சரிக்கை யுள்ளவனாகவும், தனக்கு கொடுக்கப்பட்ட ஆயுதங்களை எப்போதும் தரி த்தவனாகவும் தயார் நிலையிலே காணப்படுவான். நாமும் ஆண்டவரின் இயேசுவின் நல்ல போர்ச்சேவகனாக இருக்கும்படி அழைப்பை பெற்றி ருக்கின்றோம். எதிரியாகிய பிசாசானவ னையும், அவனுடைய தந்திரங்களை யும் எதிர்த்து போராடும்படி, நம்முடைய கர்த்தர்தாமே நமக்கு ஆவிக்குரிய சர் வாயுதவர்க்கத்தை தந்திருக்கின்றார். எனவே, நாம் அசதியாயிராமல், ஒரு நல்ல போர்சேவகனைப் போல, விழி ப்புள்ளவர்களாவும், எச்சரி புள்ளவர்க ளாகவும், நாம் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை நாம் எப்போதும் தரித்து, ஆயத்துமுள்ளவர்களாக காணப்பட வேண்டும். சத்தியம் என்னும் கச்சை, நீதி என்னும் மார்க்கவசம், சமாதா னத்ததின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவா சம் என்னும் கேடகம், இரட்சண்யம் என்னும் தலைச்சீராவை அணி ந்து கொண்டவர்களாய் தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தை கரங்க ளிலே பிடித்தவர்களாக, வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும், ஜெபம் பண்ணுகின்றவர்களாக காணப்பட வேண்டும். இன்று சிலர், நாம் தேவ னுடையவர்கள எனவே சத்துரு நம்மை மேற்கொள்ள முடியாது எனவே பயப்பட தேவையில்லை என்று அறிக்கை செய்துவிட்டு, பட்டணத்தின் காவலிலே நின்று தூங்குகின்ற காவற்காரரைப் போல காணப்படகி ன்றார்கள். இந்த உலகத்தாரோடு சேர்ந்து அவர்களுடைய போக்கிலே, அவர்களோடு இசைந்தவர்களாக, அவர்கள் செல்லும், இரவு களியாட்ட விடுதிகளுக்கும், திரைப்பட அரங்குகளுக்கும், உல்லாச வாழ்க்கைக்கும் தங்களை ஒப்புக் கொடுத்துவிடுகின்றார்கள். பிரிமான சகோதர சகோ தரிகளே, நாம் தேவனுடையவர்கள், நாம் ஜெயங் கொள்ளுகின்றவர்கள் என்று அறிக்கையிடுகின்ற நாம், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிற வர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களா கிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, தேவனுடைய சர்வாயுதவர்க்கத் தை தரித்தவர்களாக, எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாக காணப்படு வோமாக.

ஜெபம்:

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவனே, விசுவாசத்திலே உறுதியாய் இருந்து ஜெயங் கொள்ள என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8