புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 18, 2024)

கர்த்தருடைய வேளைக்காக காத்திருங்கள்

ஏசாயா 40:31

கர்த்தருக்குக் காத்திருக்கிவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;


அடிமைத்தனத்திற்குட்பட்டிருந்த தேவ ஜனங்கள், விடுதலையாக்கப்பட்டு, வனாந்திரத்தின் வழியாக பாலும், தேனும் ஓடுகின்ற கானான் தேசத்திற்கு மோசேயானவனின் தலைமையில் வழிநடத்திச் செலப்பட்டார்கள். இல ட்சக்கணக்கான ஜனக்கூட்டத்திலே யுத்தத்திற்கு செல்லக்கூடிய ஆண்கள் மாத்திரம், சுமார் ஆறு இலட்சம் பேர் இருந்தார்கள். அந்த சந்ததியாரில், இரண்டுபேர் மாத்திரமே, வாக்களிக்கப்பட்ட கானான் தேசததிற்குள் சென்றார்கள். மிகுதியானவர்கள் யாவரும் வனாந்திரத்திலே மரித்துப் போ னார்கள். அது யாருடைய குற்றம்? தேவனுடைய தவறா? மோசேயானவனின் தவறா? ஜனங்களுடையத வறா? ஜனங்கள் முறுமுறுக்கின்றவர்களும், முரட்டாட்டம் பண்ணுகின்றவர்களும், கீழ்படியாதவர்களும், இணங்காதவர்களும், இச்சிக்கின்ற வர்களாகவும் இருந்தார்கள். அதனால், பாதி வழியிலே மாண்டு போனார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அந்த வனாந்திர யாத்திரைக்கு ஒப்பனையாக இந்த பூவுகிலே நாமும் பரம கானானை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். பத்துக் கன்னிகைகளிலே, தங்கள் மணவாளன் வர ஆயத்தத்தோடே காத்திருக்கும் புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளைப் போல, நாமும் ஆயத்தமுள்ளவரகளாக இருப்பதையே நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். மோசேயானவன் தேவனுக்கு முன்பாக எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்தது போல, இன்று சிலர் உண்மையுள்ளவர்களாக இருக்காது போகலாம். அதனால் யாருக்கு நஷ்டம் உண்டாகும்? நீதி என்ன என்பதையும், சத்தியம் என்ன என்பதையும் அறிந்த நான், பரிசுத்த வேதாகமம் கூறும் தேவ ஆலோ சனையின்படி நடக்காது போனால் என்னுடைய நிலைமை எப்படியாக முடியும்? அவருடைய தவறு. இவருடைய தவறு. எனக்கு அது இல்லை. உனக்கு இது இல்லை. என்று முறுமுறுத்து நம்முடைய இலக்கை தவறவிட்டுவிடாமல், உயர்விலும், தாழ்விலும், சோதனையிலும், வேதனை யிலும், ஒருவேளை நன்மை செய்து பாடு அநுபவிக்க நேர்ந்தாலும், மற்றவர்களுடைய அநீதியிலும், குறைவிலும், அநியாயத்திலும் தரித்து நின்று விடாமல், பரிசுத்த வேதாகமம் தரும் அருமையான ஆலோசனைகளை பற்றிக் கொண்டு அவருடைய வேளைக்காக பொறுமையோடு காத்திருப்போமாக.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, ஜீவ ஓட்டத்தின் பாதையிலே வரும் உபத்திரவங்களை கண்டு நான் முறுமுறுக்காமலும், முரட்டாட்டம் பண்ணாமலும் உம்முடைய வேளைக்காக காத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 43:18-19

Category Tags: