புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 14, 2024)

கர்த்தர் உங்கள் பட்சத்திலிருந்தால்...

யாத்திராகமம் 3:12

அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்;


ஒரு கால கட்டத்திலே எகிப்தின் இளவரசன் என்று கருதப்பட்ட மோசேயானவனின் வாழ்க்கையாது திடீரென முற்றாக மாற்றமடைந்து விட்டது. மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாம னாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். நாற்பது வருடங் கள் கடந்து போயிற்று, இப்பொழுது அவனுக்கு வயதாகிவிட்டது. முன்பிருந்த சரீர பெலன் குறைந்து போய்விட்டது. எகிப்தின் அரண்மனை யிலே வாழ்ந்து வந்தவன் தற்போது ராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும் முன் பாக நிற்பதற்கு தயக்கமுள்ளவனான். அந்த வேளையிலே, தேவனாகிய கர்த்தர் தாமே தம்முடைய ஜனங்களை எகிப்தின் அடிமைத்தன த்திலிருந்து விடுதலையாக்கி, வாக்களி க்கப்பட்ட தேசத்திற்கு வழிடத் தும்படி மோசே யானவனை அழைத்த போது, 'ஜனங்கள் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வல்லமை மிக்க பார்வோர் ராஜாவிற்கு முன்பாக நிற்பதற்கு நான் எம்மாத்திரம், நான் பேச்சு வல்லமையி ல்லாதவன்' என்று பின்விளைவுகளை குறித்து தயக்கம் அடைந்தான். தேவனாகிய கர்த்தரோ நான் உன்னுடனே இருப்பேன். நான் உனக்கு கற்பிக்கும்படி செய் என்று அவனை திடப் படுத்தி அனுப்பினார். அந்த நாள் முதல், தேவன் சொன்ன காரியங் களை அவன் செய்த போது, புற தேசத்தது பராக்கிரமமுள்ள ராஜாக் கள், அந்நிய தேசத்துப் படை கள், சொந்த ஜனங்களில் இருந்து மூப்பர் மற்றும் ஜனங்களின் மனத் திற்கு பிரியமில்லாத பின்விளைவுகள் ஏற்ப ட்டது. அதனால் பலமுறை அவர்கள் மோசேயை பகைத்தார்கள். கல் லெறிந்து கொல்லும்படி முயன்றார்கள். ஆனால், அவை யாவற்றிலும் கர்த்தர் அவனோடு இரு ந்தார். மோசேயானவன் கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள் ளவனாயிருந்தான். தேவனாகிய கர்த்தரோ அவன் சென்ற இடமெல்லாம் காரியத்தை வாய்க்கப் பண்ணினார். பிரியமான சகோதர சகோதரிகளே, தேவனுடைய சித்தத்தை உங்கள் வாழ்வில் நிறைவேற்றி முடிப்பதற்கு உங்களுக்கு தடையாக இருக்கும் காரியங்கள் என்ன? எதைக் குறித்து பயப்படுகின்றீர்கள்? உங்கள் பெலன் குறைந்து போய்விட்டது என்று பயம் மனதிலே தோன்றுகின்றதா? உங்களை சூழ்ந்திருப்பவர்களின் செல்வாக்குகள் மேலோங்கி இருக்கின்றது என்று மனக் சோர்ந்து போயவிடுகின்றீர்களா? தேவன் ஒரு காரியத்தை உங்களிடம் செய்யும் படி கூறினால், அதைக் குறித்து தயக்கமடையாதிருங்கள். பின்விளைவு கள் யாவற்றையும் அவரே பார்த்துக் கொள்வார்.

ஜெபம்:

இருக்கின்றவராய் இருக்கின்ற தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் சவால்களை கண்டு மருண்டு போய்விடாதபடிக்கு, உம்மு டைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 28:20