புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 13, 2024)

அநுகூலமான துணையுமானவர்

சங்கீதம் 46:3

அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்


ஒரு தேசத்தை அரசாண்டு வந்த ராஜாவானவன், அந்த தேசத்தின் பாதுகாப்பையும், படைப்பெலனை பலப்படுத்தும்படி, ஜனங்கள் மேல் சுமத்தப்பட்டிருந்த வருமான வரி வீதத்தை நியாயமான முறையிலே சற்று அதிகரித்தான். அந்த செய்தியை தன்னுடை சேவகர்கள் வழியாக ஜனங்களுக்கு அறிவிக்கும்படி கட்டளை கொடுத்தான். ஜனங்கள் அந்த செய்தியை விரும்ப மாட்டார்கள் என்றும், சிலர் கலகம் பண்ணுவார்கள் என்றும் சேவகர்கள் நன்கு அறிந் திருந்தும், ராஜ கட்டளையை பெற் றதால், பின்விளைவுகளை குறி த்து எந்த தயக்கமும் இல்லாமல், தைரியத்தோடு சென்று செய்தி யை அறிவித்தார்கள். அந்த சேவ கர்கள் செல்லும் இடமெல்லாம், அவர்களுக்கு பின்பாக ராஜாவி னுடைய விசேஷ இராணுவ படை யானது சென்று கொண்டிருந்தது. இன்று மனிதர்கள், பொதுவாக இந்த உலகத்திலுள்ள தங்கள் அதிகாரங்களுக்கு கீழ்படிய ஆயத்தமுள்ளவர் களாக இருக்கின்றார்கள். பாசடாலையிலே கல்வி கற்க வேண்டும், நல்ல உத்தியோகம் செய்ய வேண்டும், நகரத்திலே நல்ல வீட்டிலே வாழ வேண்டும். மற்றய நாடுகளுக்கு உல்லாசப் பயணங்களை மேற் கொள்ள வேண்டும் என்பதற்காக பின்விளைவுகளை பற்றி சிந்திக் காமல், மேலான அதிகாரங்கள் கூறும் காரியங்களை விரும்பியோ, விரும்பாமலோ செய்ய ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஏனெனில், கீழ்படியாமையினால் ஏற்படக்கூடிய பாதகமான பின்விளை வுகளை தவித்துக் கொள்ளும்படிக்கு அதிகாரங்களுக்கு கீழ்படிகின் றார்கள். ஆனால், தேவனாகிய கர்த்தர் கூறும் வார்த்தைகளுக்கு கீழ்படிவதினால் உண்டாகும் மேன்மையான பலனை அடைவதைவிட, அவருடைய வார்த்தைக்கு கீழ்படிவதினால் இந்த உலகத்திலே ஏற்ப டக்கூடிய பின்விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதைக் குறித்தே அதிக கரிசனையுள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள். சரீரத்தை கொல்ல வல்லர்களுக்கோ? அல்லது சரீரத்தோடு ஆத்துமாவை கொல்ல வல்லவருக்கோ? யாருக்கு கீழ்படிவது அவசியமானது? தேவனாகிய கர்த்தர் அநீதியுள்ளவர் அல்லர். அவருடைய வழிகள் நீதியானவைகள். இந்த உலக அதிகாரங்களிலே குறைவுகள் இருக்கலாம் ஆனால், மேலான அதிகாரத்தையுடைய சர்வ வல்லமையுள்ள தேவன் சம்பூரண ராகவே இருக்கின்றார்.

ஜெபம்:

அன்பின் தேவனே, பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்ச முத்திரத்தில் சாய்ந்துபோனாலும் நீரே என் அடைக்கலமும் பெலனும் என்று சத்தியத்லே நிலைத்திருத்திக்கும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:1-2