புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 03, 2024)

பிரபல்யமானவைகள்

1 தெச 5:21

எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.


ஒரு மனிதனானவன், மிக முக்கியமான கூட்டமொன்றிலே கலந்து கொள்வதற்காக, அடுத்த ஊருக்கு பயணம் செய்து கொண்டிருந்தான். போகும் வழியிலே, குறிப்பிட்ட ஒர் இடத்தில், வழமைக்கு மாறாக ஜனக்கூட்டம் திராளாக சேர்ந்திருப்பதை கண்ட மனிதனாவன், ஜனங்கள் இவ்வளவு அதிகமாக கூடியிருக்கின்றார்களே, நான் சென்று சங்கதி என்னவென்று பார்த்து வருவேன் என்று கூறி வாகனத்தை தெருவருகே நிறுத்திவிட்டு, சன நெருகலுக்குள் நுழைந்து சென்று என்ன நடக்கின்றது என்று பார்த்தான். அங்கே சில மனி தர்கள், ஆடிப்பாடி சில வித்தைகளை காண்பித்து கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட அந்த மனிதனானவன், இதற்காக இப்படி கூட்டம் கூடியிருக்கின்றார்களே என்று தனக்குள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு, தன் வாகனத்தை நோக்கி சென்றான். ஆனால், அவன் வாகனத்தை நிறுத்தி அங்கே சென்ற போது, அவன் பின்னே வந்தவர்களும், காரணமென்னவென்றறியாமல் தங்கள் வாக னங்களையும் நிறுத்திவிட்டு ஜனக் கூட்டத்திற்குள் சென்றிருந்தார்கள். அதனால், அந்த மனிதனானவன், தன் வாகனத்தை எடுக்க முடியாமல், சில மணிநேரம் அங்கேயே காத்திருந்தான். அதனால், அவன் செல்ல வேண்டிய முக்கிய கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. பிரியமான சகோதர சகோதரிகளே, ஜனங்கள் கூட்டங்கள் இன்ற எங்கே கூடுகின்றார்கள்? எடுத்துக் காட்டாக, ஊடகங்கள் வழியாக வரும் ஒரு காணொளியை அநேக இரசிகர்கள் பின்பற்றி, தங்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றார்கள்;, காரணம் ஏதும் இல்லாமல், மற்றவர்களும் அதை பின்பற்ற விரும்புகின்றார்கள். இவ்வண்ணமாகவே, தேவ காரியங்க ளையும் இன்று பின்பற்றுவோர் தொகையை வைத்து கணிப்பீடு செய்து, அறியாத காரியங்களுக்குள் நுழைந்து, தாங்கள் பெற்றுக் கொண்டதும், தாங்கள் செய்ய வேண்டிதுமான முக்கிய காரியங்களை மறந்து போய்விடுகின்றார்கள். இதனால், சில விசுவாசிகளும் வழிவிலகி வஞ்சிக்கப்பட்டு போய்விடுகின்றார்கள். ஒரு காரியத்தை அநேகர் பின்பற்றுவதால், அது நலமானதாக இருக்கும் என்று இந்த உலகத்தின் அளவுகோலின்படி கணிப்பீடு செய்யாமல், எல்லாவற்றைம் சோதித்துப் பாருங்கள். சுயபுத்தியிலே சாயாமல், தேவ வார்த்தையின் வெளிச்சத்திர் எல்லாவற்றையும் சோதித்தறிந்து, வேதம் கூறும் நலமானவைகளை மாத்திரம் பின்பற்றுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, மனிதர்களுக்கு செம்மையாக தோன்றும் வழியிலே நான் செல்ல என் இருதயத்தை சாயாமல், உம்முடைய வார்த்தையின் வெளிசத்திலே நடக்க எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:13-14