புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 31, 2024)

தேவனைக் கவர்ந்து கொள்ளுங்கள்

யோவான் 14:16

நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத் திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.


ஒரு ஊரிலே இருந்த கடையின் முதலாளியானவன், அந்த ஊரிலுள்ள மக்கள் கவர்ந்து கொள்வதற்காக, வருடாந்த மலிவு விற்பனை நாளொ ன்றை நியமித்தான். அதற்காக அவன், துண்டு பிரசுரங்களையும், சுவ ரொட்டிகளையும் தயார் செய்த போது, அந்தக் கடையிலே இருக்கும் பொருட்களில், தான் ஆகக் குறைந்த விலையிலே மலிவாக விற்கப்படும் பொருளின் மதிப்பை அதிலே அச் சிட்டான். அந்த மலிவான விலை யை கண்ட மக்கள் திரண்டு வந் தார்கள். கடைக்கு வந்த பின்னர், பாவனைக்கு அத்தியவசியமில் லாத ஒரு பொருள் மட்டுமே மலி வாக இருப்பதை கண்டு ஏமாற்ற மடைந்தார்கள். இப்படியாக இர ண்டு, மூன்று தடவைகள் நடந்து முடிந்த பின்பு, மக்கள் அந்த கடைக் காரனின் உண்மையற்ற மனநி லையை நன்றாக அறிந்து அதற் கேற்ப செயற்படும்படி ஆரம்பித்தார்கள். பிரியமான சகோதர சகோ தரிகளே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே தம்முடைய விலை மதிக்கமுடியாத இரத்தத்தினாலே மனித குலத்திற்கு இரட்சிப்பு உண்டாகும் வழியை ஏற்படுத்தினார். அந்த அருமையான இரட்சிப்பை இலவசமாக பெற்றுக் கொள்ளும்படி வழியை வகுத்திருக்கின்றார். ஆனால், இன்று சிலரோ இந்த உலகத்திலே நடக்கும் மலிவு விற்பனையை போல சுவிசேஷத்தின் மேன்மையை அற்பமாக்கிவிடுகின்றார்கள். மக் களை கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், மனிதர்களின் பெயர்களையும், பலவிதமான கண் களை கவரும் செயற்பாடுகளையும் நடத்துகின்றார்கள். நாமோ, தேவனுக்கு முன்பாக எப்போதும் உண்மை யுள்ளவர்களாக காணப்பட வேண்டும். மனித யுக்திகளால் வரும் பலன் அற்பமே. ஆண்டவராகிய இயேசுவின் ஆதி சீஷர்கள், சுவிஷேசத்தை அறிவிப்பதெப்படியென்று பரிசுத்த ஆவியினாலே வழிநடத்தப்பட்டா ர்கள். அன்று மட்டுமல்ல, என்றென்றும் எங்களோடிருந்து சகல சத்தியத் திலும் நம்மை நடத்தும்படிக்கு, தேவ ஆவியானவர், நம்மோடு இருக் கின்றார். எனவே, சுவிஷேத்தினிமித்தம் நீங்கள் நட்ப்பிக்கும் கிரியை கள் தேவனுடைய பார்வையிலே ஏற்புடையதாக இருக்க வேண்டும். மனி தர்கள் முன்னிலே தேவ நாமம் தூஷpக்கப்படாதபடிக்கு நீங்கள் தேவ சித்தத்தை நடப்பிக்க தேவ வசனத்திற்கு விரோதமான காரியங்களை செய்யாதபடிக்கு எச்சரிக்ககையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

விலைமதிக்கமுடியாக இரட்சிப்பை எனக்கு தந்த தேவனே, நான் என் மனவிருப்பப்படி, மனிதர்களை கவர்ந்து கொள்ளாமல், உம்முடைய சித்தப்படி சுவிசேஷத்தை அறிவிக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 2:5