புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 02, 2024)

சோதனைகளின் முடிவு

எபேசியர் 6:10

கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.


வாழ்க்கையிலே நெருக்கடியான சூழ்நிலைகள் தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக அலையலையாய் வருவதினால், சில விசுவாசிகள், தங்கள் நெருக்கத்தின் மத்தியிலே, ' நான் கர்த்தரை அறிந்து இத்தனை ஆண் டுகள் ஆகிவிட்டதே, ஆனால் வாழ் விலே சோதனைகளுக்கு முடிவில் லையா?' என்று இந்த உலகிலே உயிரோடு வாழும் நாட்களிலே சோதனைகளுக்கு முடிவு நாளை தேடுகின்றார்கள். சிலர் இப்படி யாக தங்கள் வாயினாலே இதை அறிக்கை செய்யாவிடினும், அவ ர்கள் மனதிலே இவ்விதமான சிந்தித்துக் கொள்கின்றார்கள். நாம் கோணலும் மாறுபாடான சந்ததியின் நடுவே, வேற பிரிக்கப்பட்ட வாழ் க்கை வாழ்ந்து வருகின்றோம். கிறிஸ்துவை பற்றும் நாம் அனுபவ சாட்சியை பகிர்ந்து கொள்ளும் போது, இந்த உலக மனிதர்களின் பரிகாசத்தை யாரால்; நிறுத்திவிட முடியும்? இந்த உலகம் பொல்லாங் கனுக்குள் கிடக்கின்றது. கிறிஸ்துவை தரித்துக் கொண்டு வாழ்பவ னுக்கு இந்த உலகிலே உபத்திரவங்கள் உண்டு. அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்ப ப்படுவார்கள். பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போ க்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள் ளவர்களாவார்கள். நம்முடைய மாம்சம் விரும்புவதற்கு எதிரான காரி யங்கள் நமக்கு நேரிடும் போது, மனதிலே வேதனை உண்டா கின்றது. ஆனால், தேவனுக்கு பிரியமானதை செய்வதே நம்முடைய மன வாஞ்சையாக மாறும் போது, உபத்திரவத்தின் மத்தியிலும், மன திலே பெரிதான சமாதானம் உண்டாகின்றது. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; ஆனால் நீதியின் பாதையில் வாழும் நாம், இன்னும் அதிகமாக தேவ நீதியிலும், பரிசுத்தத்திலும் வளர்ந்து பெரு குவோ மாக. இந்த உலகத்திலே சோதனைகளுக்கு முடிவில்லாமல் இருக்கலாம், அதைவிட தேவ கிருபையானது, நம்மேல் அனுதினமும் அதிகமதிமாக ஊற்றப்படுகின்றது. எனவே, திடன் கொள்ளுங்கள், உலகத்தை ஜெயித்தவர்கள் நம்முடைய பட்சத்தில் இருக்கின்றார். எல்லாவிதமான உபத்திரவங்கள், துன்பங்கள், வியாகுலங்கள், வேதனைகள் மத்தியிலும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள் ளுகிறவர்களாயிருக்கிறோமே. எனவே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்படுங்கள்.

ஜெபம்:

மேன்மையான நித்திய வாழ்விற்காக என்னை அழைத்த தேவனே, நான் இந்த உலகத்தில் உண்டாகும் உபத்திரவங்களை கண்டு சோர்ந்து போகாதபடிக்கு உம்மைப் பற்றிக் கொண்டு வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:12-13