புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 01, 2024)

வாழ்நாட்களில் நீதியை நிறைவேற்றுங்கள்

மத்தேயு 5:11

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;


ஒரு ஊரிலே வசித்து வந்த எஜமானனானவன், குறிப்பிட்ட தூர தேசமொன்றிற்கு செல்ல வேண்டியிருந்ததால், தன் ஊழியர்களை அழைத்து, தான் மறுபடியும் வரும்வரைக்கும் தன்னுடைய பண் ணையை கருத்தோடு பராமரிக்கும்படி அறிவுரை கூறி சென்று விட்டான். நாட்கள் சென்ற பின்பு, தங்கள் எஜமானனானவன் வரக் காலமாகும் என்று கூறி, ஊழியர்களில் பலர், தங்கள் எஜமானானவனுடைய சொத்துக்களை கொள்ளையடிக்கவும், தங் களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கவனியாமலும் அசட்டையோடு வாழ்ந்து, தங்கள் விருப்பங்களை செய்து வந்தார்கள். ஆனால், அவர்கள் மத்தியிலே இருந்த தன் எஜமானனுக்கு விசுவாசமுள்ள சிறிய ஊழியனொருவனோ, தனக்கு கொடுத்த சிறிய பொறுப்பிலே மிகவும் கருத்துள்ளவனாக இருந்து வந்தான். அவனை கண்ட மற்ற ஊழியர்களில் சிலர், அவனை பரிகாசம் செய்து வந்தார்கள். வேறு சிலர், இவன் தன் வேலையை சரியாக செய்வ தினாலே தங்களுக்கு பிரச்சனை உண்டாகலாம் என்று அவனை கடினமாக நடத்தி அவனை அடித்து உபத்திரவப்படுத்த ஆரம்பித்தார்கள். மற்றய ஊழியர்கள், செழிப்போடு, தங்கள் வாழ்க்கையை நடத்தி வரு கின்றார்கள், தன் பாடுகள் ஒருநாள் முடிவடையும், தன் பிரயாசத்தின் பலன் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த ஊழியனும், அவனுடைய குடும்பத்தாரும் உண்மையும் உத்தமமுமாய் பல ஆண் டுகள் பிரயாசப்பட்டுவந்தார்கள். ஆனால், இந்த உலகத்திலே நீதியை நடப்பிக்க வேண்டும் என்றால், துன்பங்களை தவிர்க்க முடியாது என்ற என்ற சத்தியத்தை நன்றாக அறிந்து கொண்டான். ஆனாலும், தன் எஜமானனுக்கு விசுவாசமுள்ளவனாக இருக்க தீர்மானம் செய்து கொண்டான். அநேக ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு நாள் அவனுடைய எஜமானனானவன் எதிர்பாராத நேரத்திலே திரும்பி வந்த போது, உண்மையும் உத்தமுள்ள அந்த ஊழியனை தன்னோடு பங்கடையும்படி சேர்த்துக் கொண்டார். அநீதியை நடப்பித்து, சுகபோகமாக, தங்கள் சுய விருப்பங்களை நிறைவேற்றியவர்கள் அதற்குரிய பாதகமான விளைவை பெற்றுக் கொண்டார்கள். நீங்கள் உங்கள் எஜமானனாகிய இயேசுவுக்கு விசுவாசமுள்ளவர்களாக வாழ்கின்றீர்களா?

ஜெபம்:

என்னைப் பாக்கியம் பெற்றவானாக மாற்றிய தேவனே, இந்த உலகத்தின் பாடுகளின் மத்தியிலே உம்முடைய நீதியை என் வாழ்விலே நிறைவேற்றி முடிக்க எனக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33