புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 16, 2024)

எதை மேன்மையாக எண்ணுகின்றீர்கள்

யோவான் 6:27

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்;


ஒரு பாடசாலையிலே கற்று வந்த மாணவனானவன், சில சக மாணவர்களோடு சேர்ந்து, வகுப்பில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களிலே அக்கறையற்றவனாக இருந்தான். ஆதலால், அவனுடைய வகுப்பு ஆசி ரியர், பாடசாலை ஒழுங்கின்படி அவனுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனையை, மற்றய மாணர்கள் முன்னிலையில் கொடுத்து, அவனை நெறிப்படுத்தினார். அந்த செய்தி பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே, பெற்றோர்கள் பாடசாலைக்குச் சென்று, நடந்த சம்பவத்தை குறித்து மேலகதிக விபரங்களை அறிந்து கொண்டு, தங் கள் மகனானவனுக்கு இரக்கம் காட்டும்படி தயவாக வேண்டிக் கொண்டார் கள். அதே மாணவனாவன், சபையிலே, ஒழுங்கற்று நடந்து கொண்ட தால், சபையின் மேய்பரானவர், அவனை கடிந்து கொண்டு, அவனுக்கு நல்ல ஆலோனை வழங்கினார். அதை கேள்விப்பட்ட, பெற்றோரானவர்கள், மேய்பரானவர்மேல் கடும்கோபம் கொண்டு, அவரை சந்தித்து, வாலிப பிள்ளைகளை இப்படியாகவா அவமானப்படுத்துவது என்று சபையிலே குழப்பங்களை ஏற்படுத்தி கொண்டார்கள். பிரியமான சகோ தர சகோதரிகளே, சில தசாப்பதங்களாக சபை வாழ்க்கையின் அனுப வத்திலே, இத்தகைய சம்பவங்கள் நான் கண்ட உண்மையாக இருந்து வருகின்றது. அநித்தியமான இந்த உலகத்தின் காரியங்களுக்காக, மனி தர்கள் தவறானது யார் பக்கம் இருந்தாலும், தங்கள் காரியம் ஆக வேண் டும் என்று நீடிய பொறுமையுடன், ஜாக்கிரதையாக நடந்து கொள்கின் றார்கள். சில வேளைகளிலே, தங்கள் காரியங்கள் நிறைவேற வேண்டும் என்று உபவாசித்து ஜெபித்து, சபை நடுவே சாட்சியை கூறிக் கொள்கி ன்றார்கள். ஆனால், நித்திய ஜீவனுக்குரிய காரியங்களிலே, கால தாமதமின்றி, துணிகரமாக, கலகங்களை ஏற்படுத்த முந்திக் கொள்கின்றார் கள். இது பிள்ளைகளுடைய வாழ்க்கையில் மட்டுமல்ல, வளர்ந்து அனு பவமிக்கவர்களும் இவ்விதமாக, நித்திய ஜீவனுக்குரிய காரியங்களிலே அக்கறையற்றவர்களாகவும் துரிதமாக சண்டைகளையும் வாக்குவாதங்க ளையும் ஏற்படுத்திக் கொள்கின்றவர்களாவும் மாறிவிடுகின்றார்கள். மனு ஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே. (பிரசங்கி 6:7). ஆனால் அவன் ஆத்துமாவிற்கு திருப்தி வேண்டுமானால், அவன் நித் தியத்திற்குரியவைகளுக்கான கிரியைகளை தன் வாழ்விலே நடப்பிக் கின்ற வனாக வாழ வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, அழிந்து போகின்ற இந்த உலகத்தின் காரிய ங்களை மேன்மைப் படுத்தாமல், அழியாமையைத் தரித்துக் கொள்ளும்படி தேவ வார்த்தையின்படி நடந்து கொள்ள உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோசேயர் 3:1