புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 10, 2024)

அன்பில் நிலைத்திருங்கள்

யோவான் 15:9

பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.


முன்னொரு காலத்திலே, ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த பெற்றோரானவர், தங்கள் மகளானவளை, தாங்கள் விரும்பிய ஒரு குறிப்பிட்ட மனிதனை திருமணம் செய்யும்படி அவளை மிகவும் பலவந்தம் பண்ணினார்கள். அவள் பெற்றோருக்கும் சமுதாயத்திற்கும் கட்டுப்பட்டு இருக்க வேண் டிய சூழ்நிலை காணப்பட்டதால், அவள் தன் பெற்றோரை நோக்கி: நான் உங்கள் இஷ;டப்படி நீங்கள் விரும்பிய மனிதனை உங்களுக்காக திருமணம் செய்து கொள்கின்றேன். ஆனால் என் இருதயமோ அவரோடு இருக்காது என்று கூறி அந்த மனித னை திருமணம் செய்து கொண்டாள். பிரியமான சகோதர சகோதரிகளே, ஒரு மனிதனானவன், தன் பெற்றோருக் காக, தான் பிறந்த வீட்டிற்காக, தான் வளர்ந்த சமுதாயத்திற்காக, தன் முன் னோருக்காக, கிறிஸ்தவன் என்ற நாம த்தை தரித்துக் கொண்டு வாழ்வதானது கிறிஸ்துவோடு வாழும் வாழ்க்கையாகாது. இப்படிப்பட்ட அர்பணிப்பானது, மேலே குறிப்பிட்ட சம்பவத் திலுள்ள பலவந்தம் பண்ணப்பட்ட திருமணத்தைப் போலவே இருக்கும். ஒரு மனிதனுடைய பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே அவனுடைய இருதயமும் இருக்கும். வீட்டிற்காக, ஊரிற்காக, உலகத்தி ற்காக ஒருவன் பல நற்கிரியைகளை நடப்பிக்கலாம் ஆனால் தேவ னைக் குறித்த அன்பு ஒரு மனிதனுடைய இருதயத்திலே இல்லாதிருக் குமென்றால், அவனுடைய கிரியைகள் எல்லாம் விருதாவாக இருக்கும். 'எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக் கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.' நம்முடைய சரீரத் தின் கிரியைகள் மாத்திரமல்ல, அதைவிட மேலானதாக, நம்முடைய ஆத்துமா எப்போதும் தேவனை வாஞ்சிக்கின்றதாக காணப்பட வேண் டும். ஒரு மனிதனுடைய ஆசை இந்த பூலோகத்தின் காரியங்களை பற் றியிருந்தால், அதுவே, அவனுடைய பொக்கிஷமாக இருப்பதால், அது அவனை ஆண்டு கொள்ளும். 'நாம் தேவ அன்பில் நிலைத்திருக்க வேண்டும். பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலை த்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.' என்று ஆண்டவரா கிய இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, இந்த உலக போக்கின்படி வாழாமல், உம்முடைய அன்பிலே நிலைத்திருக்கும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:16