புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 13, 2024)

வாழ்விலே அந்நிய சத்தங்கள்?

யோவான் 10:5

அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட் டோடிப்போம் என்றார்.


ஒரு ஊரிலே வசித்து வந்த வாலிபனானவனுக்கு நல்ல நண்பனொருவன் இருந்தான். அந்த நண்பனாவன் கணித பாடத்திலே மிகவும் தேர்ச்சி பெற்றவனாகயிருந்தான். நாட்கள் கடந்து சென்ற போது, அந்த வாலி பனானவன் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்திலே அகப்பட்டதால், பாடசா லையில் கற்பிக்கப்பட்ட சில பாடங்களை தவறவிட்டுவிட்டான். முக்கி யமாக தமிழ் இலக்கணத்திலே அவ னுக்கு அதிகமாக உதவி தேவைப்ப ட்டது. ஆனால், அந்த நண்பனானவ னுக்கு அந்தத் துறையிலே தேர்ச்சியில்லாதிருந்தால், அவனால் உதவி செய்ய முடியவில்லை. ஏnனில் அவன் அறிந்ததெல்லாம் கணிதமா கவே இருந்தது. பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று சில விசுவா சிகள், அவிசுவாசிகளுடன் ஐக்கியமாக வாழ்ந்து கொண்டு, அவர்களே தங்கள் உயிர் நண்பர்கள் என்று கூறிக் கொள்கின்றார்கள். ஒருவேளை அந்த அவிசுவாசமார்க்கத்தார், இந்த உலகத்தின் போக்கின்படி கற்றவர்களும், ஒழுக்கமாக வாழ்கின்ற வர்களுமாயிருக்கலாம். ஆனால், அவர்கள் ஆண்டவர் இயேசுவையம் அவருடைய வழிகளையும் அறியாதவர்கள். ஆண்டவர் இயேசுவோடு ஐக்கியமாயிராதவன் யாரோடு ஐக்கியமாக இருப்பான்? உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையிலே சவால்கள் எதிர்நோக்கி வரும் போது, ஆண்டவர் இயேசுவை அறியாத உங்கள் உயிர் நண்பர்களாகிய அவிசு வாசமார்க்கத்தார் உங்களுக்கு எதை சொல்லிக் கொடுக்க முடியும்? அவர்கள் தாங்கள் அறிந்தவைகளையேயன்றி வேவொன்றையும் சொல்லிக் கொடுக்க முடியாது. அவர்கள் வழியாக நீங்கள் அந்நிய சத்த ங்களை கேட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகிவிடும். அது அவர்களு டைய தவறு அல்ல. அவர்கள் தாங்கள் அறி ந்ததை உங்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால், நீங்களோ, நீங்கள் கற்றுக் கொண்ட வேதத்தை மீறி, உங்கள் ஆபத்து நாட்களிலே அந்நிய சத்தங்கள் உங்கள் வாழ்க்கையில் தொனிக்கும்படிக்கு இடங் கொடுக்கின்றவர்களாக இரு ப்பீர்கள். எனவே, தேவனுடைய ஜீவ வார்த்தைகளை மீறி உறவுகளையும் நட்புக்களையும் ஏற்படுத்திக் கொள்வதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இந்த உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கின்றது. நீங்களோ, பிதவாகிய தேவனுடைய கீழ்படிவுள்ள பிள்ளைகளாக ஜீவ வார்த்தையின் வழியிலே நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

ஜீவ மார்க்கத்தை எனக்கு காண்பித்து தேவனே, நான் அந்த ஜீவ மார்க்கத்தைவிட்டு என் இஷ்டப்படி வழுவிப் போகாதடிக்கு உம்மைப் பற்றிக் கொண்டு வாழ எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:1-5