புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 09, 2024)

ஒருமனதிலே இருமனம்

மத்தேயு 6:21

உங்கள் பொக்கிஷம் எங்கே யிருக்கிறதோ அங்கே உங் கள் இருதயமும் இருக்கும்.


ஒருமனதோடும், முழுமனதோடும் நாம் தேவனன சேவிக்க வேண்டும் என்பதைக் குறித்து நாம் யாவரும் அறிந்திருக்கின்றோம். 'ஒருமனதோடு' என்று சபை நடுவே நாம் கூறும் போது, சபையார் யாவரும், ஒரும னப்பட்டவர்களாக தேவனை துதிக்க வேண்டும் என்று கூறிக் கொள்கின்றோம். அது உண்மை. ஆனால், சிலவேளைகளிலே, ஒரு விசுவாசியின் வாழ்கையிலே 'இருமனம்' காணப்படுகின்றது. 'இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலை யற்றவனாயிருக்கிறான்.' என்று பரிசுத்த வேதாககம் கூறுகின்றது. ஒரு விசுவாசியானவன் இருமனமு ள்ள வனாக இருக்கும் போது, அவன் எப்படி முழுமனதோடு தேவனை சேவிக்க முடியும்? அவன் தனக்குள்ளே தானே பிரிவினையுடையவனாக இருப்பதினாலே, மனத்திருப்தி யற்றவனாகவும் அங்கலாய்கின்றவனாகவும் வாழ்கின்றவனாக காணப்படுவான். இன்று எப்படியாக சில விசுவாசிகள் இருமனமுடையவர்களாக வாழ்க்கின்றார்கள்? இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக் கின்றார். ஆனால், இன்று சிலரோ, உலகப் பொருள் தேவனுடைய ஆசீர்வாதம் என்று போதித்து அதையே நாடித் தேடும்படிக்கு துர்ஆலோசனை கூறி, சில விசுவாசிகளை உலக பொருட்களை நாடித் தேடும்படி ஊக்குவிக்கின்றார்கள். இப்படியாக உலக பொருட்களை தங்கள் வாழ்வில் பெருக்கிக் கொள்ளும் விசுவா சியானவன் எந்த எஜ மானனை பற்றிக் கொண்டு, எந்த எஜமானனை அசட்டை செய்கின்றார்கள் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளு ங்கள். பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்ன மிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங் களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவதுருவா வது கெடுக்கி றதும் இல்லை. அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். எனவே, அழியாமையை நாடித் தேடுங்கள் அப்பொழுது நீங்கள் பரலோக எஜமானனாகிய இயேசுவுக்கு பிரியமுள்ள சீஷர்களாக இருப்பீர்கள்.

ஜெபம்:

நித்தியமானவைகளை தேடுங்கள் என்று கூறிய தேவனே, தவறான உபதேசங்களினாலே நான் வழிதவறிப் போய்விடாதபடிக்கு, உம்முடைய சத்தியத்திலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:8