புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 06, 2024)

குறைவற்ற வேதம்

மத்தேயு 24:35

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை


ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த மனிதனாவன், தன் அயலனுக்கு எதிராக அநியாயமொன்றை செய்துவிட்டான். தான் செய்தது அநியாயம் என்று அறிந்திருந்தும், அதை அவன் ஏற்றுக் கொள்ள மனதில்லாமல், அடுத்த வாரத்திலே கூடவிருக்கும் கிராமத்தின் மூப்பர்கள் சங்கத்தின் முன்னிலையில் எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்று இரவு பகலாக சிந்தித்துக் கொண்டிருந்தான். தன் செய்கைகளை ஏற்றுக்கொள்ளும் தன் நண்பர்களோடு கலந்தாலோசித்தான். அதன்படிக்கு, அந்த ஊரின் சட்டதி ட்டங்களடங்கிய யாப்புப் புத்தகத்தை மிகவும் சிரத்தையோடு வாசித்து, சட் டத்திலே ஏதாவது குறைவு இருக்கி ன்றதா? அல்லது தான் செய்த அநி யாயத்தை நியாப்படுத்த ஏதாவது காரணங்கள் யாப்பு புத்தகத்திலே இருக்கின்றா என்று ஆர்வத்தோடு தேடி, அதைக் கண்டு பிடித்தான். அவன் கண்டு பிடித்த காரணங்களை சுட்டிக் காட்டி, மூப்பர் சங்கத்தின் முன்னிலையிலே தன் செய்கையை நியாயப்படுத்தினான். சட்டம் அப்படியாக இருக்கின்றதால், மூப்பர் சங்கம் அவனுடைய நியாயப்படுத்தலை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, அந்த அநீதியான உள்ளம் படைத்த மனிதனாவன், சட்டப்புத்தகத்தை எதற்காக இரவும் பகலும் ஆர்வத்தோடு படித்தான் என்பதை பாருங்கள். இன்று சில மனிதர்கள் தேவனுடைய வார்த்தையையும் தங்கள் சுய இலாப த்திற்காக கற்றுக் கொள்கின்றார்கள். குற்ற உணர்வில்லாமல் எப்படி வெறி கொள்வது? சபை கூடிவருதலை விட்டுவிடுவதற்கு ஆதாரங்கள் உண்டோ? நெறிகெட்ட திரைப்படங்களை பார்ப்பதற்கு தடைகள் உண்டோ? குற்ற உணர்வில்லதாமல், விவாகமாகாமல் ஆணும் பெண்ணுமாக சேர்ந்திருப்தற்கு வழிகள் உண்டோ? இப்படியாக பற்பல காரணங்க ளுக்காக நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகளை புரட்டிப்போடும்படி வெகுவாய் துணிகரம் கொள்கின்றார்கள். ஒருவரும் தேவ வார்த்தை களை புரட்டிப் போட முடியாது. அப்படியாக தேவ வார்த்ததையை புரட்டிப்போட முயற்சிக்கின்றவர்கள் தங்கள் வாழ்க்கையையே புரட்டு கின்றார்கள் என்பதை மறந்து போய்விடுகின்றார்கள். மனிதனுடைய ஆக்கங்களிலே குறைகள் உண்டு. ஆனால் தேவனுடைய வழி உத்தமமானது. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. கர்த்தருடைய வேதம் குறைவற்றது. தேவன் தம்மைப் பரிகாசம்பண்ணவொட்டார் மனிதன் எதை விதைக்கின்றானோ அதை அறுப்பான்.

ஜெபம்:

ஜீவ வார்த்தைகளை எனக்கு தந்த தேவனே, நான் ஆவிக்கென்று விதைத்து ஆவியினாலே நித்தியஜீவனை பலனாக பெற்றுக் கொள்ளும்படிக்கு, உம்முடைய வழியிலே வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:16