புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 05, 2024)

எல்லாற்றையும் செய்து முடிக்கும் பெலன்

பிலிப்பியர் 4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.


'நாங்கள் நினைத்ததை எப்படியும் நடத்தி முடிப்போம்'என்ற வார்த்தைப் பிரயோகங்களிளால் சில மனிதர்கள் தங்களைப் குறித்து பெருமை பாராட்டுவதை நாம் கேட்டிருக்கின்றோம். தேவ பிள்ளைகளாகிய நாம் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். பலவான் கையிலுள்ள அம்புகள் அவன் குறித்த இடத்திற்கு இலக்கை சென்றடையும். அவ்வண்ணமாகவே, நாமும் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருடைய கரத்திலுள்ள கருவிகள் என்ற சிந்தையைவிட்டு ஒருபோதும் மாறிப்போய் விடக்கூடாது. பராக்கிரமமுள்ள தேவனானவர் சகலத்தையும் செய்ய வல்லவர்;. அவர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடைப்படாது. அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேறும்படிக்கு அவர் செய்யும்படி நமக்கு ஒப்புவித்ததை, அவர் நினைத்த பிரகாரமாக செய்கின்றவர்களாக வாழ வேண்டும். 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.' இந்த வார்த்தை உண்மையுள்ளது. ஆனால், நாம் இந்த வார்த்தையைக் குறித்து தவறான எண்ணங் கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக காணப்பட வேண்டும். 'எல்லாவற்றையுஞ் செய்ய எனக்கு பெலனுண்டு' என்பதன் பொருள் என்ன என்னதை சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய மனதும் மாசம்சமும் விரும்புவதை செய்வது தேவ பெலன் அல்லவே. தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக செயற்படுகின்ற யாவரும் தேவனுக்கு அல்ல, இருள் அதிகாரத்திற்கே உழியம் செய்கின்றார்கள். இதை ஏற்றுக் கொள்ளவது கடினமாக இருக்கலாம். என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்.'என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு' கூறியிருக்கின்றார். மேலும், 'நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல் லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.' எனவே, தேவுவ னுடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருக்கின்றவர்கள், தங்கள் வாழ்க்கையில் தேவசித்தத்தை நிறைவேற்றி முடிக்கும்படி செய்ய வேண்டி யவைகளை செம்மையாக செய்து முடிக்க, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே அவர்களை பெலப்படுத்தி நடத்துகின்றார். பிரியமானவர்களே, எனவே நாம் உலகத்திற்கும் மாசம்சத்திற்கும் நம் வாழ்வில் இடம் கொடாமல், தேவனுடைய திருக்கரத்திலுள்ள கருவிகளாக காணப்படுவோமாக.

ஜெபம்:

உம்முடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்க என்னை பெலப்ப டுத்தும் தேவனே, என்னுடைய நினைவெல்லாம் உம்முடைய வார்த்தைக்கு உட்பட்டிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:6