புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 15, 2024)

சொன்னதை செய்து முடிப்பார்!

எபிரெயர் 13:5

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.


எல்லா சூழ்நிலைகளிலும், நாம் கர்த்தரை நம்பி, அவருடைய வார்த்தையில் உறுதியாக நிலைநிற்கும்படி நம்மை நாம் தினமும் பயிற்சிவிக்க வேண்டும். அவரை நம்பி நாம் வாழும் போதும், சில வேளைகளிலே நாம் தவறி விழுந்துவிடும் நிலைமைகள் உண்டாகின்றது. நாம் மடங்கடிக்கப்பட்ட வேளைகளிளெல்லாம் கர்த்தர்தாமே நம்மை கைவிடவேமாட்டார். ஆனால் நாம் அவரை விட்டு விலகிவிடக் கூடாது. அவ ருடைய வார்த்தையில் உறுதியாக இருக்கின்றவர்கள், விழுந்த இடத் திலிருந்து எழுந்திருப்பார்கள். அதா வது, எந்த இடத்தில் அவர்கள் பாவம் செய்தார்களோ, அந்த இட த்திலே மனந்திரும்பி, தங்கள் குற் றங்களை ஏற்றுக் கொண்டு, அறிக்கை பண்ணிவிட்டுவிடுகின்றார்கள். மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டிய இடங்களிலே மன்னிப்பை வழங்கி, மற்றவர்களிடம் மன் னிப்பை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டிய இடத்திலே மன்னிப்பை கேட்டு கொள் வார்கள். ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு தம் சீஷர் களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். அப் பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலை கள் அதின்மேல் மோதிற்று. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலை யணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என் றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பய ப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். அவர் அக்கரைக்கு போவோம் என்றால், நிச்சயமாக அவர் அக்கரைக்கு கொண்டு சேர்ப்பார். ஆனாலும் சீஷர்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிக்ககூடாமல், பயம் அவர்களை ஆட்கொண்டதால் சமாதான த்தை இழந்து போனார்கள். நான் உன்னை கைவிடுவதுமில்லை உன்னை விட்டு விலகுவதுமில்லை என்று கர்;த்தர் கூறியிருக்கின்றார். வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் எனவே இக்கட்டான சூழ்நிலை யிலே மனம்பதறி அவிசுவாசத்திற்குரிய கிரியைகளை நடப்பிக் காமல், பயத்தை புறம்பே தள்ளி கர்த்தருடைய வார்த்தை நம்மில் நிறைவேற பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

ஜெபம்:

வாக்குமாறாத தேவனே, என் பெலவீனங்களை அறிந்தவரே, இக்கட்டும் நெருக்கமும் என்னை சூழ்ந்து கொள்ளும்போது, உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருக்கும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:174-176