புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 03, 2024)

மனநிறைவுடனான வாழ்க்கை

சங்கீதம் 119:14

திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.


பொருளாதார நெருக்கடி! நாளாந்த வாழ்க்கையின் பாடுகள் ஓய்ந்து போவதைப் போல தெரியவில்லை. தங்கள் மனம் போன போக்கிலே வாழும் உலகத்தார்களின் வாழ்க்கையோ செழிப்பாக இருக்கின்றது. இவையாவற்றின் நடுவிலும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? என்று ஒரு விசுவாசியானவன், தன் ஏக்கத்தை தன் பாட்டனாரிடம் கூறினார். அவனுடைய பாட்டனார் அவனை நோக்கி: தம்பி, ஓங்கி வளர்ந்திருக்கும் அந்தப் பனை மரத்தைப் பார்! கடும் வெப்பமான நாட்கள், மழையில்லாமல் நிலம் வறண்டு போயிருக்கின்றது. ஆனாலும் குறித்த காலத்தில் அது தன் பலனை கொடுக்கின்றது. அது எப்படி என்று எப்போதாவது நீ சிந்தி த்ததுண்டா? கர்த்தருடைய பார்வையிலே நீ அந்தப் பனை மரத்தைவிட விட விசேஷpத்தவன் அல்லவா! நீ நம்முடைய பரலோக எஜமானனா கிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உன் இரட்சகராக ஏற்றுக் கொண்டது உண்மை. ஆனால், உன் வாழ்விலே, நீ அவருக்கு கொடு க்கும் கனத்தைவிட, உன் வேலையிலுள்ள எஜமானனுக்கு நீ கொடு க்கும் கனம் பெரிது. முதலாவது, தேவனடைய ராஜ்யத்தையம் அதன் நீதியையும் தேடுங்கள் என்று பரலோக எஜமானன் இயேசு கூறியிருக்க, நீ உன் வேலையை குறித்து அதிகமாய் அலட்டிக் கொண்டு, உன் உலக எஜமானனை எப்படித் திருப்திப்படுத்தி, பதவியுயர்வை பெற்றுக் கொள்ளலாம் என்று இரவிலும், பகலிலும், நடுஜாமத்திலும், அதிகாலையிலும் பிரயாசப்பட ஆயத்தமுள்ளவனாய் இருக்கின்றாய். அதனால், தேவ நீதியின் வழிகளை சமரசம் செய்து வாழ்கின்றாய். கர்த்தருக்கு உன் வழியை ஒப்புக் கொடுத்து, அவருக்காக காத்திரு, அவர் உன் வழியை வாய்க்கச் செய்வார் என்று தன் பேரனானவனுக்கு பாட்டனானவர் ஆலோசனை கூறினார். பிரியமானவர்களே, கர்த்தரு டைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத் தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று பரிசுத்த வேதா கமத்தில் காண்கின்றோம். திரளான செல்வத்தினால் உண்டாகும் மகிழ் ச்சியைவிட தேவனுடைய வழியிலே நடக்கும் தேவ பிள்ளைகள் பெரி தான மகிழ்ச்சியையும், மனத்திருப்தியையும் அடைந்து கொள்கின் றார்கள். அந்த மனநிறைவானது, கர்த்தரின் நிறைவான வார்த்தை யினால் உண்டானதால், உயர்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்ப த்திலும் குறைந்து போவதில்லை.

ஜெபம்:

மகா வறட்சியான காலத்திலும் பலன் கொடுக்கும்படி என்னை வேறு பிரித்த தேவனே, இரவும் பகலும் நான் உம்முடைய வார்த்தையை தியானித்து அதன் வழியில் நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:11-12