புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 02, 2024)

அருமையான கிருபையின் நாட்கள்

எபேசியர் 4:24

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதியமனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வாழ்க்கையிலே துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, மனிதர்கள் தங்கள் பெலவீனத்திலே, தங்கள் மனதிலே தோன்றும் வார் த்தைகளை பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். சில வேளைகளிலே இக்கட்டான சூழ்நிலைகளிலே சில விசுவாசிகளுடைய வாயின் அறிக்கை யும் அவ்விதமாகவே இருக்கின்றது. கிருபை நிறைந்த தேவன்தாமே, ஒரு வனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதற் காக, நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். அதனால் விசுவாசிகள் தங்கள் சிந்தையில் தோன்றும் அவிசு வாசத்தின் வார்த்தைகளை வாயினாலே அறிக்கையிட்டுவிட்டு, முன்பு போல எப்போதும் தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணிவிடக்கூடாது. நாம் பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேறுபிரிக்கப்பட்டிருக் கின்றோம். 'வேறு பிரிக்கப்பட்டவர்கள்' 'மறுபடியும் பிறந்தவர்கள்' என்ற நாமங்களை தரித்தவர்கள், பரிசுத்த வேதாகமம் கூறும் வேறு பிரிக்க ப்பட்டவர்களுக்குரிய வாழ்க்கை முறையை தழுவிக் கொள்ள வேண் டும். நாம் கிறிஸ்துவை அறிய முன்பதாக இருந்த உபத்திரவங்க ளும், சாவல்களும் நமக்கு உண்டாகும். அது மட்டுமல்ல, நாம் கெட்டுப்போ கின்ற பழைய சுபாவங்களைவிட்டுவிட்டு, புதிய மனுஷனுக்குரிய சுபாவங்களை தரித்துக் கொள்ளும் போது, இந்த உலகத்தின் போக்கில் வாழும் மனிதர்கள் எரிச்சலடைந்து, நம் புதிய வழிகளைக் குறித்து நிந் தையான பேச்சுகளை பேசிக் கொள்வார்கள். அதாவது, முன்பு இருந் ததைவிட எதிர்ப்பும் ஏளனமும் பெருகி வரும், அந்த வேளைகளிலே நாம் பழைய சுபாவங்களின்படி பதிலடி கொடுக்கக் கூடாது. மாறாக, நாம் வேறு பிரிக்கப்பட்டவர்களுக்குரியதும், மறுபடி பிறந்தவர்களுக்குரிய துமான சுபாவங்களை வெளிப்படுத்த வேண்டும். புதிய மனுஷனைத் தரித்தவர் களாக வாழ வேண்டும். ஆண்டவரோடு இருந்த யூதாஸ்கரியோத் தேவ ஊழியத்திற்காக வேறு பிரிக்கப்பட்டிருந்தான். ஆனால், அவனோ ஆரம்; பத்திலிருந்து கள்வனாகவே வாழ்ந்து வந்தான். கர்த்த ருடைய அழைப் பையும் கிருபையையும் அசட்டை செய்து வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் முடிவானது மிகவும் பரிதாபமாக மாறிவிட்டது. பிரியமானவர் களே, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கிருபையின் நாட்களிலே மாம்சத் தின் எண்ணங்களை நிறைவேற்றி தப்பித்துக் கொள்ள வகை தேடாமல், வேறு பிரிக்கப்பட்டவர்களும், மறுபடி பிறந்தவர்களுக்கு முரிய வாழ் க்கை வாழும்படிக்கு ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

இந்த உலகத்தின் போக்கிலிருந்து என்னை வேறு பிரித்த தேவனே, அருமையான கிருபையின் நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ளும்படி பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:15-17