புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 01, 2024)

சமாதானத்தின் தேவன்

2 தெச 3:16

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக.


'நடந்த சம்பவத்தில் என்னிடத்தில் அநீதி ஏதும் இல்லை என்பதையும் நான் கூறியவைகளினால் பொய் இல்லை என்பதையும் நீங்கள் நன்றாக அறிந்திருக்கின்றீர்கள். அப்படியிருந்தும் நான் ஏன் சமாதானத்தை இழ ந்து இவ்வளவாய் துன்பப்பட வேண்டும்' என்று ஒரு விசுவாசியானவன் தன் மேய்ப்பனானவரிடம் கண்ணீ ரோடு கூறிக் கொண்டான். அந்த விசுவாசியானவனின் நிலைமையை நன்றாக அறிந்திருந்த மேய்ப்பரா னவர் அவனை நோக்கி: மகனே, நீ உண்மையுள்ளவன் என்பதை குறி த்து சாட்சி பகர்வதற்கு நான் தய ங்க மாட்டேன். உன்னை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் ஒருபோதும் உன்னைக் கைவிட் டுவிடவோ, உன்னை விட்டு விலகவோ மாட்டார். அவருடைய கிருபை என்றுமுள்ளது. அதே வேளையிலே, இந்த உலகத்திலே ஆண்டவர் இயேசுவை நம்பி வாழ்பவர்களுக்கு உபத்திரவங்கள் உண்டாகும். எவ் வளவு அதிகமாக உபத்திரவங்கள் பெருகினாலும், அவை மத்தியிலும், பூரண சமாதானத்தோடு வாழும்படிக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசுதாமே தம்முடைய சமானதானத்தை நமக்கு வைத்து சென்றிரு க்கின்றார். ஆனால், அந்த சமாதானமானது அவருடைய வார்த்தைக்குள் இருக்கின்றது. அதை நம் வாழ்வில் அனுபவிப்பதற்கு அவருடைய வார்த்தை நம்மில் நிலைத்திருக்க வேண்டும். நடந்த சம்பவத்தில் உன் அயலவன் அநீதி செய்தது உண்மை. அந்த சூழ்நிலையிலே, நீ ஆண் டவர் இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருந்து, அவருடைய வார்த் தையின்படியே நடந்து கொள்வதற்கு பதிலாக, அந்த சூழ்நிலையிலே அவருடைய வார்த்தையைவிட்டு விலகி, இந்த உலகத்தின் போக்கி ன்படி நீ நீதியை நடப்பிக்கும்படி முயற்சி செய்தாய். அதனால், நீ தேவ சமா தானத்தை இழந்து போனாய். இனிமேல் நீ அப்படி நடந்து கொள் ளாமல், தேவ வார்த்தையில் நிலைத்திரு. அப்போது ஆவியின் கனி உன்னிலே நிலைத்திருக்கும் என்று ஆலோசனை கூறினார். பிரியமா னவர்களே, உபத்திரவங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, உங்கள் விண் ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுத லினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அவருடைய வேளைக் காக காத்திருங்கள். சுயபுத்தியின்மேல் சாராமல், தேவ வார்த்தையில் நிலைத்திருங்கள். எல்லாப்புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங் கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவு க்குள்ளாகக் காத்துக்கொள்ளும்படி இடங் கொடுங்கள்.

ஜெபம்:

பூரண சமாதானம் தரும் தேவனே, நான் என் வழிகளில் சென்று நீர் கொடுத்திருக்கும் சமாதானத்தை இழந்து போகாதபடிக்கு, எதிரடையான சூழ்நிலைகளிலும் உம் வார்த்தையில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 16:33