புதிய நாளுக்குள்..

தியானம் (தை 28, 2024)

வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்

2 கொரிந்தியர் 1:20

தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.


கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் எங்கே? என் வாழ்விலே ஆசீர்வாதங்கள் எங்கே? எண்ணிக்கையின் பெருக்கம் அர்த்தமற்றதாக இருக்கின்றதே என்று மனக் குழப்பத்தோடு வாழும் விசுவாசியே, கர்த்தருக்கு காத்திரு! ஆபிரகாம் என்னும் மனிதனை கர்த்தர் அழைத்த போது, அவனுக்கு ஒரு பிள்ளைகூட இல்லை. அவனும் அவனுடைய மனைவி சாராளும் வயது முதிர்ந்தவர்க ளாக இருந்தார்கள். அந்த நிலைமையிலே, கர்த்தர் அவனை நோக்கி: நான் உன்னை பெரிய ஜாதி யாக்குவேன். வானத்து நட் சத்திரங்களைப் போல உன் சந்த தியைப் பெருகப்பண்ணுவேன். கட ற்கரை மணலைப் போல உன் சந்ததி இருக்கும் என்று வாக்களி த்தார். கர்த்தர் அவனை அழை த்து 25 ஆண்டுகள் சென்ற பின்னரும், எண்ணிக்கையிலே எந்தப் பெரு க்கமும் இல்லை. அவனுடைய வயதும், அவன் மனைவியுடை வயதும் பெருகி இருந்ததது. கர்த்தருடைய வாக்குத்தத்தத்திற்கும், ஆபிரகாமு டைய சந்ததியின் எண்ணிக்கைக்கும் எந்த தொடர்போ அர்த்தமோ தெரியாதிருந்த நிலைமையாக இருந்தது. ஆனால், கர்த்தர் முன்குறித்த நேரத்திலே ஒன்றுமில்லாத எண்ணிக்கை ஒன்றாக கூடியது. ஆனால், இன்று அந்த வாக்குத்தத்தத்தை தியானித்துப் பாருங்கள்! கர்த்தர் கூறிய வார்த்தைகள் ஒன்றும் தவறிப் போவதில்லை (யோசுவா 21:45). அந்த காரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத் தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள் ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதி யாயும், அவருக்குச் சொந்தமான ஜனமுமானவர்களே, உங்கள் தற்N பாதைய சூழ்நிலைகளைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள்! நல்ல போர்ச் சேவகனைப் போல, உங்கள் அறிக்கையிலே உறுதியாய் நிலை த்திருங்கள். அழைத்தவர் உண்மையுள்ளவராக இருக்கின்றார். உலக போக்கில் வாழ்பவர்களின் வாழ்க்கையை கண்டு எரிச் சலடையாதிரு ங்கள். பொல்லாதவர்களின் செழிப்பைக் கண்டு சோர்ந்து போதிருங்கள். பூமிக்கு உப்பும், உலகத்திற்கு வெளிச்சமுமானவர்களே, நன்மை செய்வதிலே சோர்ந்து போகாதிருங்கள். மகிமையின் நம்பிக்iயாக கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசம் செய்கின்றார். அணையாத தீபமாக அவரே உங்கள் மனக் கண்களை பிரகாசமடையச் செய்வாராக.

ஜெபம்:

என் பெலனான, தேவனாகிய கர்த்தாவே, என் வழியைக் உம்மிடத்தில் ஒப்புவித்து, உம்மாலே காரியம் வாய்கும் என்று நம்பிக்கையோடு, உம்மில் மனமகிழ்சியாயிருக்க, என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 1:27