புதிய நாளுக்குள்..

தியானம் (தை 27, 2024)

சத்திய வார்த்தையில் நிலைத்திருங்கள்

யோவான் 15:7

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்ய ப்படும்.


ஆண்டவராகிய இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின் சென்றார்கள். அந்த ஜனத்திரளிலே, புருஷர்கள் மாத்திரம் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள். அந்நாளிலே, அவருக்கு பின்செ ன்றவர்கள் ஆண்டவர் இயேசுவின் உபதேசங்களை கேட்டார்கள், அநேக அற்புதங்களை கண்டார்கள், மேலும் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் பலுகிப்பெருகப் பண்ணி அங்கிருந்த யாவரும் திரு ப்தியாக உண்ணும்படி செய்தார். இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்று கூறி, அவரை ராஜாவாக்கு ம்படி மனதாயிருந்தார்கள். அவர்களுடைய உண்மையான மனநிலை மையை அறிந்த ஆண்டவராகிய இயேசு, அதை அவர்களுக்கு வெளி ப்படுத்தினார். 'அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பி யுங்கள்;' என்று நித்திய வாழ்வு தரும் சத்திய வார்த்தைகளை அவர்க ளுக்கு எடுத்துக் கூறினார். ஆனால், அவர்கள் சத்தியமான வார்த்தை களை கேட்டபோது, அதை ஏற்றுக் கொள்ள மனதில்லாமல், அநேகர் அவரைப் விட்டு பின்வாங்கிப் போனார்கள். அது மட்டுமல் லாமல் ஆண்டவராகிய இயேசுவினினடத்தில் குற்றத்தை கண்டு பிடிக்கும் படி அவரோடு வாக்குவாதம் பண்ணினார்கள். அவருடைய பன்னிரண்டு சீஷர்கள் அவருடனேகூட இருந்தார்கள். அந்த பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் பிசாசாயிருந்தான். (யோவான் 6:1-71). பாருங்கள், சத்திய வார் த்தைகளை கேட்க மனதில்லாமல் எத்தனையோ ஆயிரக்கணக்கான மனு ஷர்கள் ஆண்டவர் இயேசுவை விட்டு பின்வாங்கிப் போனார்கள். இன் றும்கூட, அற்புத அடையாளங்களை காணவும், விருந்து உபசாரங் களை அனுசரிக்கவும் அநேகர் சந்தோஷத்தோடேகூடி வருகின்றார்கள். ஆனால், சத்திய வார்த்தைகளை சுத்தமாய்ப் பேசும் போது, அவர்களில்; அநேகர் கோபமடைந்து அவ்விடம் விட்டு அகன்று போனால் ஆச்சரி யப்படாதி ருங்கள். எண்ணிக்கையைக் குறித்து அதிக கவனம் செலுத்தாமல்;, ஆண் டவர் இயேசுவின் சத்திய வார்த்தையில் நிலைத்திருங்கள்.

ஜெபம்:

அன்பின் பரம தந்தையே, நான்; எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும், சத்திய வார்த்தையிலே நிலைத்திருந்துஇ உம்முடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோசேயர் 1:9-11