புதிய நாளுக்குள்..

தியானம் (தை 12, 2024)

உணர்வுள்ள ஜீவியம்

சங்கீதம் 1:2

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


ஒரு தேசத்தின் மாநகரமொன்றிலே இயங்கி வந்த பிரபல்யமான பாடசாலையிலே, கல்வி கற்பதற்காக, வருடந்;தோறும் பல மாணவர்கள் தேசத்தின் பல இடங்களிலிருந்தும் விண்ணப்பிப்பது வழக்கமாயிருந் தது. எப்படியாவது தங்கள் பிள்ளைகளை அந்தப் பாடசாலையிலே சேர்த்துவிட வேண்டும் என்று பல பெற்றோர்கள் விடாமுயற்சியோடு பிரயாசப்பட்டு, தங்கள் பிள்ளைகளு க்கான அனுமதியை பெற்றுக் கொள் வார்கள். ஆனால், பாடசாலைக்கு சென்ற பின்னர், குறிப்பிட்ட சில மாணவர்களே, ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களை முறைப் படி கருத்தோடு கற்று வந்தார்கள். சில பெற்றோரைப் பொறுத்தவரையில், தங்கள் பிள்ளைகள் பிரபல் யமான பாடசாலையில் படிக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு பெரு மையாக காணப்பட்டது. அந்தப் பாடசாலையில் கற்று கொண்ட, பாட ங்களையோ, நற்பண்புகளையோ மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக் கான வழிமுறைகள் ஒன்றையுமே பின்பற்றுவதில்லை. இப்படிப்பட்ட வர்கள் பாடசாலை நாட்கள் முடிந்த பின்னரும், கூடிப்படடித்த மாண வர்களுடன் சேர்ந்து குடித்து வெறித்து பல களியாட்டங்களில் ஈடுபட்டு வரும் போதும், நான் அந்தப் பாடசாலையிலே படித்தவன் என்று பெரு மிதமாக கூறிக் கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு என்ன பலன்? இந்நாட்களிலே, இவ்விதமாகவே, சில விசுவாசிகளுடைய வாழ்க் கையும் காணப்படுகின்றது. நாங்கள் பிரபல்யமான சபைக்கு செல்கின் றோம் அல்லது அந்த ஊழியருடைய சபையிலே நாங்கள் அங்கத்தவ ர்கள் என்று சொல்வதிலே திருப்தியும், பெருமிதமும் அடைகின்றார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையிலே வேதம் கூறும் கனிகளை காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. இந்த உலகத்தினால் உண்டா கும் பெயரும் புகழும் நம்மை தேவ ராஜ்யத்திற்கு வழிநடத்தி செல்வதி ல்லை. இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற வேத வார்த்தையின் வழியிலே வாழ்பவனே தேவனுக்கு பிரியமுள்ள வனாக இருக்கின்றான். பிரியமானவர்களே, சத்திய வேதத்தை சுத்த மாக பேசும் ஆவிக்குரிய ஐக்கியத்திலே இணைந்து கொள்வது அவசி யமானது. ஆனால், சபையின் அங்கத்துவத்தினாலே திருப்தியடைந்து விடாமல், பிதாவாகிய தேவனுடைய சித்தம் நம்முடைய வாழ்விலே நிறைவேறு ம்படி உணர்வுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, மற்றவர்களுடைய பெயர்களின் நிழலிலே நான் திருப்தியடையாமல், உம் வார்த்தையின் வழியிலே வாழும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:21