புதிய நாளுக்குள்..

தியானம் (தை 11, 2024)

குறைவுகளிலே நிறைவாக்குவோம்

2 சாமுவேல் 2:26

சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.


ஒரு ஊரிலே அநேக வருடங்களாக ஊழியம் செய்து வந்த அனுபவமிக்க மேய்ப்பரானவர், தன்னோடு ஊழியம் செய்யும் உதவி ஊழிய ர்களை குறித்து மிகவும் கரிசணையுள்ளவராக இருந்து வந்தார். சில காரியங்களை இளம் ஊழியர்கள் உணர்ந்து கொள்ளும்படிக்கு சுவாரசியமான கதைகள் வழியாகவும் அவர்களோடு பேசிக் கொள்வார். ஒரு நாள், ஒரு உதவி ஊழியன் அவரிடம் வந்து, ஐயா, அந்த மற்றய ஊழியன் இப்படியான தவறான காரியத்தை செய்துவிட் டான் என்றும் அறிந்து அதை நீங்கள் பராமுகமாக விட்டிரு ப்பது நியாயமா என்று குழப்பத்துடன் கேட்டுக் கொண் டான். அதற்கு அந்த மேய்ப் பரானவர்: நம் சக ஊழியன் குற்றம் செய்தது உண்மை. அதை நானும் அறிந்திருக்கின்றேன். ஆனால், நீ மற்றவனுடைய வேலையை திருடிக் கொள்வது நியாயமா என்று கேட்டார். அதற்கு அந்த உதவி ஊழியன் ஆச்சரியத்துடன், நான் யாருடைய வேலையை திருடினேன் என்று கேட்டான். அதற்கு மேய்ப்பரானவர்: நீ குற்றம் பிடிக்கும் சாத்தனுடைய வேலையை திருடி விட்டாயே? மகனே, உன் சக ஊழியன் குற்றம் செய்தது எனக்குத் தெரியும், அவனுடைய நிலைமை முழுவதையும் நான் உன் னுடன் கூற ப்போவதுமில்லை, கூற வேண்டிய அவசியமும் இல்லை. இப்போது, நீயும் குழப்பமடைந்தால், உன் வேலைகளில் தவறினால், நம்மிடையே இருக்கும் ஒரு குறைவு இரண்டாக மாறிவிடும். நான் அவனுடைய காரியத்தைப் பார்த்துக் கொள்கின்றேன். நீ எனக்கு உதவியாக இருந்து உன் வேலைகளை தொடர்ந்து நேர்;த்தியாக செய்து கொள். உன் சகோதரனுக்காக கருத்தோடு ஜெபம் செய்து கொள் என்று அந்த உதவி ஊழியனை உற்சாகப்படுத்தினார். ஏலி என்னும் ஆசரியனுடைய நாட்களிலே, அவனுடைய குமாரர்கள் மிகவும் துஷ;டர்களாக இருந் தார்கள். அவன் தேவனைப் பார்க்கிலும் துன்மார்க்கத்தில் வாழும் தன் குமாரர்களை மதித்து வந்தான் (1 சாமு 2:19). ஆனால், பிள்ளையா ண்டானாகிய சாமுவேலோ, அவர்களுடைய குறைகளை நோக்கி பார் க்காமல், தேவனை நோக்கிப் பார்த்து, தேவன் குறித்த நாள்வ ரைக்கும் நீடிய பொறுமையோடு தேவவார்த்தைக்கு கீழ்படிந்திருந்தான். அதுபோலவே, நாமும் தேவனையே நோக்கிப் பார்த்து அவர் நமக்கு கொடுத்தவைகளிலே உண்மையாக நடந்து கொள்வோமாக.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, நான் மற்றவர்களுடைய குறைகளை பார்த்து நான் குறைவுள்ளவனாகாதபடிக்கு, நீர் எனக்கு ஒப்புவித்தைவைகளை கருத்தோடு நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - வெளி 12:9-10