புதிய நாளுக்குள்..

தியானம் (தை 01, 2024)

புதிய மாற்றங்கள்!

யோவான் 6:63

நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.


புதிய ஆண்டு, புதிய மாதம், புதிய நாள், புதிய ஆரம்பம், புதிய எதிர்பார்ப்புக்கள்! இப்படியாக இந்நாளிலே மனிதர்கள் நன்மைக்கு வழி வகுக்கும் புதிய தீர்மானங்களை தங்கள் வாழ்விலே எடுத்துக் கொள் கின்றார்கள். ஆண்டவர் இயேசுவை அறிந்தவர்கள் மட்டுமல்ல, அவரை அறியாதவர்களும் கூட, கடந்த ஆண்டிலே தங்கள் வியாபாரத்தில், கல் வியில், வேலையில், குடும்பத்தில் தாங்கள் அடைய வேண்டிய பல னை அடைய முடியாதபடிக்கு இட றலாய் நிறுத்திய காரணங்க ளை கண்டறிந்து, தங்கள் கட்டுப்பாட் டிற்குள் இருக்கும் தடையான கார ணிகளை மாற்றும்படி பிரயாசப்ப டுகின்றார்கள். நல்லோர் மேலும், தீயோர் மேலும் கிருபையை பொழி யப் பண்ணுகின்ற பிதாவாகிய தேவனானவர், மனிதர்களின் கரத்தின் கிரியைகளின் பலனை அவனவனுக்கு கொடுக்கின்றார். எடுத்துக்காட் டாக, தன் வயலை உழுது, விதைவிதைத்து, தன் முதலீட்டை இரவும் பகலுமாக பராமாரித்து வரும் விவசாயியானவனுக்கு அவனுடைய கர த்தின் கிரியையின் பலனை அருள் செய்கின்றார். இப்படியாக மனித ர்கள் இந்த உலகத்தின் காரியங்களுக்காக அதிகமாக பிரயாசப்படுகின் றார்கள். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரை க்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நட ப்பியுங்கள்; என்று கூறிய ஆண்டவராகிய இயேசுதாமே, அந்த ஜீவ போஜனத்தை நமக்கு கொடுத்திருக்கின்றார். நித்திய ஜீவனுக்கென்ற அழைப்பை பெற்ற நாம், ஆண்டவராகிய இயேசு நமக்கு விட்டுச்சென்ற சமாதானமான வாழ்க்கை யை கெடுக்கும் ஆகாத சுபாவங்களை கண்டறிந்து, அவைகளை விட் டுவிட வேண்டும். எந்த மனிதனானவனும் தன் வாழ்க்கையிலே ஒரு நன் மையான மாற்றத்தை உண்டுபண்ணுவதற்கு, மனமாற்றமானது அடித்தள மானதாக இருக்கின்றது. மனித வாழ்விலுள்ள சில ஆகாத சுபாவங்களை மனித முயற்சியினாலே மாற்றிவிட முடியாது. நமக்கு புதிய வாழ்வை தந்த தேவனானவரே, நமக்கு காலை தோறும் புதிய கிரு பையை பொழிகின்றார். இந்த கிருபையின் நாட்களிலே, கருத்தோடு வேதத்தை தியானித்து, ஊக்கமாக ஜெபம் பண்ணுங்கள். கர்த்தருடைய வேதம், கன்மலை போன்ற கடினமான இருதயங்களை நொறுக்கும் சம்மட்டி யைப்போல் இருக்கின்றது. ஜீவனுள்ள வார்த்தைகள் உங்களில் கிரியைகளை நடப்பிக்குப்படி இடங்கொடுங்கள். தூய ஆவியானவர் தாமே இந்த ஆண்டிலே உங்களை பெலப்படுத்தி நடத்தி செல்வாராக.

ஜெபம்:

சகல சத்தியத்திலும் நம்மை வழிநடத்தும் உம்முடைய ஆவியா னவரை நமக்கு தந்த தேவனேஇ இந்த ஆண்டிலே நான் இன்னுமதிகமாக உம்மை கிட்டிச் சேர எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 23:29