புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 29, 2023)

தேவனுக்கு உகந்த பாத்திரங்கள்

நீதிமொழிகள் 6:23

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.


அக்காலத்திலே, மோசேயானவன் எகிப்தின் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவனாக இருந்தான். ஆனால், அவனுடைய தேர்ச்சியானது, தேவனாகிய கர்த்தரை அறிந்து கொள்வதற்கோ அல்லது அவருடைய சித்தத்தை தன் வாழ்வில் நிறைவேற்றி முடிக்கவோ அவனுக்கு உதவவில்லை. அதுபோலவே, அப்போஸ்தலனாகிய பவுல், ஆண்டவர் இயேசு யார் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பாகவே, பெரும் கல்விமானாக இருந்தபோதும், தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக சபையை துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். அவ னுடைய கல்வியானது, அவன் கர்த்தர் யார் என்பதை அறிந்து கொள்ளவோ அல்லது தேவனாகிய கர்த்தருடைய சித்தத்தை நிறை வேற்றி முடிக்கவோ உதவவில்லை. அதனால், இப்படியாக கர்த்தராகிய இயேசுவை அறியும் அறிவின் மேன்மைக்காக, தன்னிடத்திலிருந்த மேன்மையான எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் என்று அறிக்கையிட்டார். சுயபெலனானது, மனிதர்களுடைய மனதிலே இறுமாப்பை உண்டு பண்ணும். அவைகள் பொவாதூக, கல்வி, வேலை, செல்வம், அந்தஸ்து போன்றவற்றினாலே மனிதர்களு டைய மனதிலே உருவேற்றப்படுகின்றது. இன்று சிலர் இவற்றினாலே உண்டாகும் செல்வாக்கினால், தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்பத்திலும், வேலைத் தளங்களிலும், சபை ஐக்கியங்களிலும் தீர்மானங்களை எடுத்துக் கொள்கின்றார்கள். ஆனால், அவை யாவும் தேவனுடைய வார்த்தைக்குள் அடங்கியிருந்தால் மட்டுமே பிரயோஜனத்தை உண்டாக்கும். அவை தேவனுடைய வார்த்தைக்கு எவ்விதத்திலும் விரோதமாக இருந்தால், அந்த சுயபெலத்தினாலே, அவர்களுக்கு சுயதிருப்தி மட்டுமே மிகுதியாக இருக்கும். விசுவாசியானவனின் இருதயத்திலே தேவ னுடைய வார்த்தை நிலைத்திராவிட்டால், அவன் பலனற்ற மரத்தைப் போல இருப்பான். கர்த்தருடைய வசனமானது நம் கால்களுக்குத் தீபமும், நாம் செல்லும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. அவருடைய கட்டளைகள், பிரமாணங்கள், சாட்சிகள், கற்பனைகள், நீதி நியாயங்கள் யாவும் நாம் இருளிலே தடுமாறாமல், வெளிச்சத்திலே நிதனமாய் நடக்க கற்றுக் கொடுக்கின்றது. அவருடைய வார்த்தைக்கு நம் வாழ்விலே முதலிடத்தை; கொடுக்கும் போது, அதனால், நாம் நமக்கும் நம்மை சூழந்துள்ள யாவருக்கும் மிகுந்த பலனை உண்டாக்குகின்றவர்களாக திகழ்வோம்.

ஜெபம்:

ஜீவமார்க்கத்தை எனக்கு போதிக்கும் தேவனே, நான் என் சுயபெலத்தில் நம்பிக்கை வைத்து மாண்டு போய்விடாதபடிக்கு, உம்முடைய ஜீவ வார்த்தைகளை பற்றி நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:130