புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 23, 2023)

நீங்கள் எப்படியாக ஆயத்தப்படுகின்றீர்கள்?

பிலிப்பியர் 2:12

உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.


ஆண்டவராகிய இயேசு இந்த பூவுலகிற்கு வந்த நாளை இம்மாத்திலே நாம் நினைவுகூருகின்றோம். அதை முன்னிட்டு பற்பல காரியங்களை இந்த உலகிலே மனிதர்கள் செய்து வருகின்றார்கள். வியாபார ஸ்தாபனங்கள் பெரும் விற்பனைக்காக, பலவிதமான விளரம்பங்களோடு ஆய த்தப்படுகின்றார்கள். கொள்வனவு செய்வோர், பல பொருட்களை வாங் கும்படிக்கு, கடுமையாக உழைத்து சேமிக்கின்றார்கள். வீடுவாசல்களை அலங்கரித்து, புத்தாடைகளை வாங்கி, பரிசுப் பொருட்களை ஆய த்தப்படுத்துகின்றார்கள். தானதர்மங்களை செய்கின்றவர்கள், இந்நாட்களிலே வறுமையினாலே வாடும் மனி தர்களுக்கு இன்னும் அதிகமாக உதவிகளை செய்ய வேண்டும் என்று பிரயாசப்படுகின்றார்கள். இது மகிழ்ந்து களிகூரும் நாட்கள் என்று சொல்லி, மதுபானங்களை வாங்கி களியாட்டங்களுக்காக பலர் தங் களை ஆயதப்படுத்திக் கொள்கின்றார்கள். தாங்கள் கிறிஸ்தவர்கள் என்ற நாமத்தை தரித்ததினால், வருடத்தில் ஒருமுறையாவது, ஆல யத்திற்கு செல்ல வேண்டும் என்று ஒருசாரார் மனதிலே தீர்மானித்துக் கொள்கின்றார்கள். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பிர காரமாக இன்னுமொரு சாhர், இந்நாட்களிலே அதிமாக உழைத்துக் கொள்ளலாம் என்று ஆலயத்திற்கு செல்லாமால் தங்கள் வேலைக ளிலே அதிக கவனம் செலுத்துகின்றார்கள். வேறு சிலர் நத்தார் கானங்களைபாடி அநேகரை கூட்டி நத்தார் நிகழ்;ச்சியை நடத்துவோம் என்று பிரயாசப்படுகின்றார்கள். இவ்வண்ணமாக உலகமெங்கும் மனித ர்கள் பரபரப்புள்ளவர்களாக, பற்பல விதமாக செயற்படுகின்றார்கள். நீங்கள் எவ்வண்ணமாக பரமன் இயேசு இந்த பூவுலகிற்கு வந்த நாளை நினைவுகூரும்படி ஆயதப்படுகின்றீர்கள்? உங்களுக்கு ஒரு இரட்சகரை அனுப்புவேன் என்று வாக்குரைத்த பிதாவாகிய தேவன், தீர்க்கதரிசிகள் வாயிலாக முன்னுரைத்த படியே, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இரட்சகரை அனுப்பி, தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். இரட்சகராகிய இயேசு, தம் திருப்பணியை இந்த பூவிலே நிறைவேற்றி, புதிதும் ஜீவனுமான பரலோம் செல்லும் மார்க்கத்தை நமக்கென்று ஏற்ப டுத்தி, நம்மை அதற்குள் அழைத்திருக்கின்றார். 'நான் மறுபடியும் வரு வேன்' என்று கூறி சென்ற கர்த்தராகிய இயேசு மறுபடியும் வருவார். எனவே, வாக்கு மாறாத தேவனாகிய கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்த த்தை பற்றி கொண்டவர்களாக, கர்த்தருடைய பிறப்பை நினைவு கூரும் இந்நாட்களிலே, நாம் தேவ பக்தியோடும், பரிசுத்தத்தோடும், நம்மு டைய இரட்சிப்பு நிறை வேறப் பிரயாசப்படுவோமாக.

ஜெபம்:

அந்தகாரத்தினின்று உம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு என்னை வரவழைத்த தேவனே, இந்நாட்களிலே நான் உம்முடைய திரு ச்சித்தத்தை நிறைவேற்றும்படி பிரயாசப்பட எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9