புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 22, 2023)

இலக்கை நோக்கிய பயணம்

பிலிப்பியர் 3:12

நான் அடைந்தாயிற்று, அல் லது முற்றும் தேறினவனா னேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப் பட்டேனோ அதை நான் பிடி த்துக்கொள்ளும்படி ஆசை யாய்த் தொடருகிறேன்.


தன் வாலிப நாட்களிலிருந்து மிகவும் கடினமாக உழைத்து வந்த மனிதனானவன், வேலையிலிருந்து ஒய்வு பெறும் நாட்கள் அண்மித்திரு ப்பதை குறித்து மிக மகிழ்ச்சியாயிருந்தான். வேலையிலிருந்து ஒய்வு பெற்றபின்பு, நான் மிகவும் கடினமாக பிரயாசப்பட்டேன். பிள்ளைக ளுக்கு வேண்டிய யாவையும் மிகையாக செய்து கொடுத்தேன். எனவே, மிகுதியான நாட்களை நான் உல்லா சமாக கழிக்க வேண்டும் என்று தீர் மானம் செய்து கொண்டான். பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வதிலும், கப்பலிலே உல்லாசப் பயணம் செய் வதிலும், பணத்தையும், நேரத்தை யும் செலவு செய்து வந்தான். அது அவனுடைய வாழ்க்கையின் தீர்மா னம். இப்படியாக மனிதர்கள் தங்கள் வேலையிலிருந்து ஒய்வு பெற்று, நாட்களை தங்கள் சொந்த விருப்ப ப்படி உல்லாசமாக கழிப்பதுபோல, ஒரு கிறிஸ்தவனானவன், இந்தப் பூமியில் வாழும்வரை, கிறிஸ்தவ வாழ்விலிருந்து ஒய்வு பெற முடி யாது. நாம் சில ஊழிய பொறுப்புக்களிலிருந்து ஒய்வு பெற வேண்டிய நாட்கள் வரும் ஆனால், நான் மிக கடுமையாக ஊழியம் செய்தேன், மினஷரியாக பல நாடுகளுக்கு சென்று, பல பாடுகள் துன்பங்கள் மத்தி யிலே ஊழியம் செய்தேன். சபையிலே அநேக பொறுப்புக்களிலிருந் தேன். அது போதும், இனி நான் என் விருப்பப்படி வாழ்வேன் என்று விசுவாசியானவனும் கூற முடியாது. நாம் நம் வாழ்நாட்கள் முழுவதும் கிறிஸ்துவின் சாயலில் நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும். கனி கொடுத்து ஓய்ந்த மரம்போல நம்முடைய வாழ்க்கை இருக்கமு டியாது. வேதபாடங்கள், பிரசங்கங்கள், அனுபவங்கள் வாயிலாக கற் றுக் கொண்டவைகள் எப்போதும் நாம் நம் வாழ்வில் செயற்படுத்துகின் ற வர்களாக காணப்பட வேண்டும். நாம் ஊழியர்களாக இருந்தாலும், விசுவாசிகளாக இருந்தாலும், நான் அனுபவமுள்ளவன், முற்றிலும் தேறி னவன் என்று எண்ணி போதிக்கப்படமுடியதா நிலையை அடை ந்துவி டக் கூடாது. நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமு தல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, மகிமையிலே சேரும் நாள் வரைக்கும் ஒரே சிந்தையாயிருக்க வேண்டும். பரம பந்தையப் பொருளை நோக்கி முன் னேறுகின்றவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

என் பலத்த அடைக்கலமான தேவனே, நான் உம்மையே நம்பியிருக்கின்றேன். முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இருப்பீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 71:9