புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 20, 2023)

சோர்ந்து போகாதே

நியாயாதிபதிகள் 6:14

கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ;


ஒரு சமயம், அந்நிய ஜனங்களின், கைகளானது தேவ ஜனங்களின்மேல் பலத்துக்கொண்டபடியால், தேவஜனங்கள் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடை க்கலங்களாக்கிக்கொண்டார்கள். தேவ ஜனங்கள் விதை விதைத்திருக் கும் போது, பல அந்நிய ஜாதிகள் வெட்டுக்கிளிகளைப்போல் எண்ண முடியாத திரளான ஓட்டகங்களில் வந்து, அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து நிலத்தின் விளைச்ச லைக் கெடுத்து, ஆகாரத்தையாகி லும், ஆடுமாடுகள் கழுதைகளையா கிலும் வைக்காதே போவார்கள். இதனால் தேவ ஜனங்கள் வெகு வாய் ஒடுக் கப்பட்டிருந்தார்கள். தேவ ஜனங்களை, இந்த அவல நிலை மையி லிருந்து விடுதலை செய்யும்படி, தேவனானவர், கிதியோன் என்னும் மனிதனை அழைத்தார். அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் என் ஜனங்களை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். கர்த்தரோ அவனை நோக்கி: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ. உன்னை அனுப்புகின்றவர் நானால்லவோ, நான் உன்னுடனேகூட இருப்பேன் என்றார். எளிமையான கிதியோனின் தலைமையில், முந்நூறு மனிதர்களோடு, ஆயுதங்கள் ஏதுமின்றி, பலத்த அந்நிய ஜாதிகளிடத்திலிருந்து, பெரிதான விடுதலையை தேவனாகிய கர்த்தர்தாமே கட்டளையிட்டார். பிரியமானவர்களே, இன்று உங்கள் கண்களுக்கு முன்பாக இருக்கும் மலை போன்ற பிரச்சனை என்ன? கர் த்தரின் வார்த்தையின்படி வாழ்வதினால், உங்களை எதிர்ப்பர்வர்கள், வெகுவாய் பலத்திருக்கின்றார்கள் என்று எண்ணி கலங்குகின்றீர்களா? உங்களை அழைத்த கர்த்தர் கைவிடுவாரோ? அவர் ஒருபோதும் கைவி டமாட்டார். கர்த்தர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண் ணுகிறார். வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெரு ப்பினால் சுட்டெரிக்கிறார். எனவே, அவருடைய பலத்த கரத்தினாலே உண்டாகும் விடுதலையை காணுமட்டும், அவருடைய நேரத்திற்காக காத்திருங்கள். கர்;த்தர் உங்கள் இரட்சகராக இருப்பதால் நீங்கள் பயப் பட வேண்டாம். உங்களுக்கு இருக்கும் கொஞ்ச பெலத்தோடு, தேவ னுக்கு முன்பாக உண்மையுள்ள வர்களாக இருங்கள். விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருங்கள்.

ஜெபம்:

சிறுமையும் எளிமையுமான என்னை நினைவுகூரும் தேவனே, உலகத்தினால் உண்டாகும் சவால்களை கண்டு நான் சோர்ந்து போகாமல், விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோசுவா 1:9