புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 18, 2023)

உபயோகமுள்ள பாத்திரம்

யாத்திராகமம் 3:12

அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்;


அக்காலத்திலே, தேவ ஜனங்கள் எகிப்து தேசத்திலே அடிமைகளாக துன்பப்பட்டுகொண்டிருந்த நாட்களிலே, மோசே பிறந்து, திவ்விய சவுந் தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார் வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்க ப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். திவ்விய சவுந்தரியவனாயிருந்த மோசேயானவன், தேவனாலே முன்குறிக்கப்பட்டவன். அவனுடைய நாற்பது வயதிலே, அவன் கல்வியிலும், வாக்கிலும், செய்கையிலும் வல்லமையுள்ளவனாக இருந்தான். நான் என்று சொல்வதற்கு அவனிடம் அநேக உலக காரியங்கள் இருந்தது. ஆனாலும், தேவனுடைய நேரம் இன்னும் வரவி ல்லை. அவன் எகிப்தைவிட்டு ஓடிச்னெ;று, நாற்பது வருடங்கள் ஆடுகளை மேய்பவனாக இருந்து வந்தான். அவனுக்கு எண்பது வயதா னபோது, நான் என்று கூறுவதற்கும், எனக்கு இன்ன வல்லமை உண்டு என்று சொல்வதற்கும் அவனிடம் எதுவும் இருக்கவில்லை. அந்த வேளை யிலே தேவனாகிய கர்த்தர் மோசேயை அழைத்தார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். இப்படியாக நான் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லாதிருந்த மோசே வழியாக தாம்; முன்குறித்த காரியத்தை தேவனாகிய கர்த்தர் நிறைவேற்றி முடித்தார். பிரிய மானவர்களே, சிலர் பிறப்பாலே சிறப்பு குடிமக்களாக இருக்கின்றார்கள். வேறு சிலர், உலக கலைகளை கற்று தேர்ந்ததாலே உலகத்திலே பிரபுக்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர், தங்கள் தாங்கள் சேர்த்துக் கொண்ட ஆஸ்திகளாலே பெரும் அந்தஸ்துள்ளவர்களாக இருக்கின் றார்கள். இவைகள் யாவும் இந்த உலகத்திலே சில காரியங்களை நடப் பித்து முடிக்கலாம். ஆனால், இவைகளினாலே ஒருவனும் தேவனுடைய அழைப்பை பெற்றுக் கொள்ளவும், அவருடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்கவும் முடியாது. எனவே, நீங்கள் எப்படிபட்டவர்களாக இருந் தாலும், எந்த வயதுடையவர்களாக இருந்தாலும், உங்களைத் தாழ்த்தி, உங்கள் இருதயத்தை தேவனிடத்தில் முற்றாக ஒப்புக் கொடுங்கள். அப்பொழுது, நீங்கள் தேவசித்தத்தை நிறைவேற்றும் தேவனுக்கு உகந்த பாத்திரங்களாக இருப்பீர்கள்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, உம்முடைய சித்தம் செய்ய தங் களை ஒப்புக் கொடுத்த உம்முடைய தாசர்களைப் போல நானும், என்னை தாழ்த்தி உம்முடைய சித்தத்திற்கு முற்றாக ஒப்புக் கொடுக்கும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாத்; 3:11-15