புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 17, 2023)

மறுபடியும் சுமக்க முடியாத பாரங்களா?

மத்தேயு 11:29

உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக் கும்.


சந்தைக்கு செல்லும்படிக்கு, ரயில் வண்டியிலே ஏறிக்கொண்ட தாயானவள், தன் பொதிகளை இறக்கி வைத்து ஆசனமொன்றிலே அம ர்ந்து கொண்டாள். சற்று தூரம் சென்ற பின்பு, அடுத்த ரயில் நிலை யத்திலே மேலும் சில காய்கறிப் பொதிகளை எடுத்துக் கொண்டு, சீக் கிரமாக ரயிலிலே மறுபடியும் ஏறிக் கொண்டவள், மேலதிகமாக ஏற்றிக் கொண்ட பொதிகளை இறக்கி வைப்பதற்கு இடம் இருந்தபோதும், தனது பையிலே போட்டு, அந்தப் பாரத்தை தான் சுமந்து கொண்டி ருந்தாள். இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும், பின்பு அதை கேட்கின்றவர்களுக்கும் சற்று நகைப்புக்குரியதாக இருக்கலாம். ஆனால், சில விசுவாசிகளுடைய வாழ்க்கையானது இந்த சம்பவத்திற்கு ஒத்ததாகவே போய் கொண்டிருக்கின்றது. நம்மை அழைத்த தேவன் சர்வ வல்லமையுள்ளவர், அவர் உண்மையை காக்கின்ற தேவன். அவரிடத்திலே தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து, எல்லா பாவ, பார சுமைகளையும் அவரிடம்; இறக்கி வைத்து, நன்றாக ஆரம்பிக்கின்றார்கள். ஆண்டவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாள் மிகவும் பாக்கியமுள்ள நாள் என்று கொண்டாடுகின்றார்கள். நாட்கள் கடந்து செல்லும் போது, புதிய சுமைகளை தங்கள் மேல் ஏற்றிக் கொண்டு, அந்த சுமைகளின் அழுத் தத்தை தாங்க முடியாமல், நான் ஏன் இப்படியான பாரங்களை சுமக்க வேண்டும் என்று நொந்து கொள்கின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, உங்களை அழைத்த தேவன், நீங்கள் சுமக்க முடியாத பாரங்களை சுமக்கும்படி அழைக்கவில்லை. ஆண்டவர் இயேசுவை அறியாத நாட்களிலே, நான் செய்து முடிப்பேன் என்று சுயபெலத்திலே தங்கி வாழ்ந்து வந்தீர்கள். 'நான்' என்று வாழ்ந்து வந்த நாட்களை விட்டு. அந்த நாட்களை கடந்து, ஆண்டவர் இயேசுவோடு வாழு ம்படி அழைப்பை பெற்றிருக்கின்றோம். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிற வர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்க ளுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று கூறிய ஆண்டவர் இயேசு, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கின்றார். எனவே, எனக்கேன் இந்த சுமை? நான் ஏன் சுமக்க வேண்டும் என்னும் சுய பெலத்தின் தொனியை உங்களைவிட்டு அகற்றி, என் இயேசு என்னோடு இருக்கின்றார் என்ற பெலத்தோடு, இயேசுவை நோக்கி, உங்க ளுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுங்கள்.

ஜெபம்:

இளைப்பாறுதல் தருவேன் என்று வாக்குரைத்த தேவனே, நீர் எப்போதும் என்னோடு இருக்கின்றீர் என்ற உணர்வுள்ள இருதத்யதோடு, நியமித்த ஓட்டத்தை ஓடி முடிக்க எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1