புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 12, 2023)

நிலையற்ற உலகில் நிலையான நம்பிக்கை

சங்கீதம் 62:8

ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கல மாயிருக்கிறார்.


அநேக ஆண்டுகளாக ஒரு கம்பனியிலே வேலை பார்த்து வந்த தாயானவள், தன் கணவனை இளம் வயதிலே இழந்து போனாதால், தன்னுடைய பிள்ளைகளை தனியாக வளர்ந்து வந்தாள். ஆண்டுகள் கடந்து சென்ற போது, அவள் வேலை பார்த்து வந்த கம்பனியிலுள்ள இயக்குனர், அந்த தாயாளவளைவிட இன்னும் துரிதமாக வேலை பார்க்கும் இளவயதுள்ளவர்களை வேலைக்கு அமர்த்தும்;படிக்கு, அந்த தாயானவளை தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். அதை அங் கிருந்து அநேக சக ஊழியர்கள் கண்டபோதும், இயக்குனருக்கு பயந்திருந்ததால், காணாதவர்களைப் போல இருந்து விட்டார்கள். சில மாதங்களுக்கு பின்னர், அந்த தாயானவள், கண்ணீரோடு அந்த கம்பனியைவிட்டு விலகிச் சென்றுவிட்டாள். சில நாடுகளிலே இப்படிப்பட்ட சம்பவங்களை தவிர்க்கும்படியாக சட்டங்கள் அமுலில் இருக்கின்ற போதிலும், பொதுவாக இன்றைய உலகிலே மனிதர்களுடைய மனநிலை அந்த இயக்கு னருடைய மனநிலையைப் போலவே இருக்கின்றது. மற்றவனுடைய வாழ்க்கையை குறித்த கரிசனையேதுமில்லாமல், தங்களுக்கு அதிக இலாபமானவைகள் எவைகளோ, அவைகளையே நாடித் தேடுகின்றார்கள். ஆனால், படைத்த தேவன் தன்னுடையவர்களை மறந்து போவாரோ? ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது என்று தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனங்களைக் குறித்து கூறியிருக்கின்றார். நம்முடைய தேவானாகிய கர்த்தர் தன்னிடத்தில் வரும் எவரையும் பலனற்றவர்கள் என்று தள்ளிவிடுவதில்லை. மாறாக, அவர்கள் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும், அவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு புதிய வாழ்வை கொடுத்து, அவர்கள் தம்மில் நிலைத்திருந்து இன்னும் அதிக கனிகளை கொடுக்கும்படி அவர்களை வழிநட த்திச் செல்கின்றார். பிரியமானவர்களே, கர்த்தரையே நோக்கி அமர்ந்திருங்கள். அவரே நம் கன்மலையும், நம் இரட்சிப்பும், நம் உயர்ந்த அடைக்கலமுமானவர்;. அவரை நம்பினோர் என்றென்றைக்கும் கைவிடப்படுவதில்லை.

ஜெபம்:

நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனாகிய கர்த்தாவே, நிலையற்ற இந்த உலகின் போக்கிலே நான் வாழாமல் உம்மையே நம்பிக்கையாக கொண்டு வாழும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 17:7-8