புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 10, 2023)

மனரம்மியமான வாழ்க்கை

சங்கீதம் 23:1

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடை யேன்.


ஒரு ஊரிலே வசதியாக வாழ்ந்து வந்த மனிதனொருவன், என்னை இன்னும் மேலதிகமாக ஆண்டவர் ஆசீர்வதித்தால் நான் வறியோருக்கு தானதர்மங்களை செய்வேன் என்று கூறிக் கொண்டான். அவன் வாழ்ந்த தெருவிற்கு அப்புறமாக ஒரு எளிமையான வீட்டிலே, வாழ்ந்து வந்த பாட்டியானவள், அன்றன்றாட உழைப்பிலே வாழ்ந்து வந்த போதிலும், தன்னைவிட வறுமையான நிலைமையில் வாழும் எந்த மனிதர்களை கண்டாலும், மனதுருகி, தன்னிடத் திலுள்ள கொஞ்சத்திலிருந்து, அவ ர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க எப் போதும் ஆயத்தமுள்ளவர்களாக இருந்தாள். அதனால் அவள் ஒரு போதும் குறைவுபட்டுப் போனதில்லை. மேலதிகமாக இருந்தால் செய் வேன் என்று சொல்கின்றவன் சுயநலமுடையவனாக வாழ்கின்றவன், அவன் மனம் ஒருபோதும் திருப்தியடையாததினால், அவனிடலிருப்பது ஒருபோதும்; அவனுக்கு போதாதது போலவே இருக்கும். அந்த எளிமை யான வாழ்க்கை வாழும் பாட்டியானவள், எல்லா சூழ்நிலைகளிலும் மனரம்யமாக வாழ கற்றுக் கொண்டதால், அவள் மனம் எப்போதும் திருப்தியாகவே இருந்தது. அவள் தன் குறைவிலே நிறைவாய் வாழக் கற்றுக் கொண்டாள். பரலோகத்திலே தனக்கு பொக்கிஷங்களை சேர் த்து வைப்பதின் மேன்மையை அறிந்தவளாக வாழ்ந்து வந்தாள். பிரிய மானவர்களே, நம்முடைய பரம பிதா இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராக இருப்பது போல, நாமும் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்களாக மாற வேண்டும். சிலர் இந்த உலக ஐசுவரியம் நிறைந்தவர்களாக இருந்து, அழிந்து போகும் ஐசுவரியத்தில் நம்பிக்கை வைத்து, ஐசுவரியம் தங்கள் சந்ததியை காக்கும் என்ற எண்ணத்துடன் பல தலைமுறை களுக்கு பொக்கிஷங்களை இந்த உலகிலே சேர்த்து வைக்கின்றார்கள். ஆனால், இரக்கத்திலோ அவர்கள் ஏழைகளாகவே மரிக்கின்றார்கள். இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்கள், அவர்களிடம் திரளான ஐசுவரியம் இல்லாதிருந்தாலும், கர்த்தரை நம்பி நன்மை செய்கின்றார்கள். அவர் கள் அதிகமாக இந்த உலகத்திலே சேர்த்து வைப்பதில்லை. கர்த்தரை தங்களுடைய சந்ததியின் சகாயராக வைத்துப் போகின்றார்கள். கர்த்த ருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. (சங்கீதம் 34:9-10)

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள பிதாவே, எல்லா சூழ்நிலைகளிலும் மனரம்யமாய் இருக்கவும், உம்மைப் போல இரக்கத்தில் ஐசுவரிமுள்ளவ னாக மாறவும் எனக்கு கற்றுத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 31:14