புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 08, 2023)

ஒருவரோடொருவருக்குள்ள ஐக்கியம்

1 யோவான் 1:7

அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்


பல ஆண்டுகாலமாக குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் மின்சார வசதிகள் இல்லாதிருந்ததால், இரவு நேரங்களிலே அந்த கிராமத்தின் தெரு வழியாக செல்வது கடினமாக இருந்து வந்தது. அதனால், அந்த கிராம த்தின் முதல்வர், அரச அதிகாரிகளிடத்தில் விண்ணப்பித்திருந்தார். அதன் பலனாக, அந்த தெருவிலே மின்கம்பங்களான இரு கரையிலும் நேர்த்தியாக நடப்பட்டு, அதிலே ஒளி வீசும் மின்குமிழ்களை பொருத்தினார்கள். யாவும் அழகாக அலங்கரிக்க ப்பட்டிருந்தது. வேலைகள் யாவும் பூர்த்தியான பின்பு, முன்குறித்த இரவிலே, மின்குமிழ்களை முதன் முறையாக ஒளிவீச பண்ணும் விழாவிற்கு சில அதிகாரிகளும், ஊர் மக்கள் யாவரும் வருகை தந்திருந்தார்கள். கிராம மக்களின் கரகோசத்தோடு, கிராமத்தின் முதல்வர், அந்த மின்சார குமிழ்களை ஏற்றும் படிக்கு, மின்விசை நிலைமாற்றியை (Electric Switch)அமுக்கிய போது, மின்குமிழ்கள் ஒளிவீசவில்லை. உடனடியான அங்கிருந்த மின்சார தொழில் நுட்பப்; பணியாளர் (Electrician), மின்சார தொடர்புகளை பரிசோதித்து பார்த்த போது, மின்கம்பியானது (Wire) பிரதான மின்சார தொகுதியோடு சரியான முறையில் இணைக்கப்படாதிருப்பதை கண்டு, அந்த இணைப்பை சரியாக பொருத்தினார். அப்போது, அந்த தெரு முழுவதும் ஒளி பிரகாசித்தது. மக்கள் யாவரும் சந்தோஷத்தினால் ஆர் பரித்தார்கள். ஆம் பிரியமானவர்களே, மின் கம்பங்களும், மின்குமிழ்க ளும் நேர்த்தியாக பொருத்தப்பட்டிருந்த அந்த அலங்காரமானது, பகல் வேளையிலே மிக அழகாக காட்சியளித்தது. ஆனால் இருள் சூழ்ந்த போது, மின்குமிழ்களை ஏற்ற முடியவில்லை. அவை யாவும் அழகாக காட்சியளித்ததினால் பலன் என்ன? அதுபோலவே, நம்முடைய ஐக்கி யமும், அழகாகவும், நேர்த்தியாகவும், ஜனத்திரள் நிறைந்ததாகவும் காணப்படலாம், ஆனால் அந்த ஐக்கியமானது பிராதான ஆசாரியராகிய இயேசுவோடு இணைக்கப்படாதிருந்தால், விசுவாசிகள் மத்தியிலே தெய்வீக ஐக்கியம் உண்டாயிருக்காது. இருளில் பிரகாசிப்பிக்கின்ற மகிமையின் ஒளி அங்கே இருக்காது. எனவே, பிதாவாகிய தேவனோடும், அவருடைய குமாரனாகிய இயேசுவோடும் ஐக்கியமாயிருங்கள். கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் கிறிஸ்தவனாக வாழ முடியாது. கிறிஸ்துவின் ஆவியைத் தரித்தவர்களாக அவருடைய ஒளியிலே நாம் நடந்து, அந்த திவ்விய ஒளியினாலே ஒருவரோடொருவர் ஐக்கியமுள் ளவர்களாக இருப்போமாக.

ஜெபம்:

உன்னதமான தேவனே, இந்த உலக போக்கிலுள்ள ஐக்கியத்திலே திருப்தியடைய முயலாமல், உம்மோடுள்ள ஐக்கியத்திலே நாம் எப்போதும் உறுதியாக நிலைத்திருக்கும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:9