புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 07, 2023)

கிறிஸ்துவின் நற்கந்தம்

1 தெச 5:23

உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.


அனுதினமும் கிறிஸ்துவோடு வாழும் பரிசுத்த வாழ்வு வாழும்படிக்காக நாம் வேறுபிரிக்கப்பட்டிருக்கின்றோம். நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்டோம். எனவே நாம், நம்முடைய இருதயத்தை எல் லாக் காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அங்கிருந்து பரிசுத்தமான ஜீவ ஊற்று புறப்; படுகின்றது. கிறிஸ்துவை தரித்த வாழ்வு சாக்கடை போன்ற வாழ்வு அல்லவே. ஒரு பட்டணத்தில் இரு ந்த நீண்ட சாக்கடையிலே, அந்த ஊரிலுள்ள கழிவு நீரோடு வரும் அழுக்குகள் அதிகமாக தேங்கி தங் கியிருந்ததால், துர்நாற்றம் எடுத்தது. அவ்வழியாய் கடந்து போகின்ற வர்கள், அந்த நாற்றத்தை சகிக்கக் கூடாமல், தங்கள் கைகளால் மூக்கை அடைத்துக் கொண்டு சென்று வந்தார்கள். அங்கு வாழும் மக் கள், அதைக் குறித்து பட்டணத்தின் நகர சபையிலே முறையீடு செய் தார்கள். இன்று கிறிஸ்துவை அறிய வேண்டிய பிரகாரமாக அறியாத வர்கள், தங்கள் இருதயத்தை ஊரின் அழுக்குகள் சென்றடையும் சாக் கடையைப் போலாக்கும்படி, அழுக்கள் அங்கே தேங்கி நிற்க இடங் கொடுக்கின்றார்கள். இருதயம் எதினால் நிறைந்திருக்கின்றதோ, அதுவே வாயினாலே பேசப்படும். சாக்கடையிலிருந்து துர்நாற்றம் மட்டுமே புற ப்படும். நம்முடைய அழைப்பு அத்தகையதல்லவே. நாம் தேவனுக்கு சுகந்த வாசனையான துதியை ஏறெடு க்கும், பரிசுத்த சந்ததியா கவும், இராஜரீக ஆசாரிய கூட்டமாகயும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றோம். எனவே, மற்றவர்களின் குறைகள் நிறைந்திருக்கும் இடமாக உங்கள் இருதய த்தை மாற்றிப் போடாதிருங்கள். எனவே, பரிசுத்தமானவைகளை நம் இருதயத்திலே சேர்த்து வைப்போமாக. பிரியமானவர்களே, துர்மனச் சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத் தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத் தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

ஜெபம்:

கிறிஸ்துவின் நற்கந்தமாக நம்மை ஏற்படுத்திய தேவனே, குறை களினாலும், அசுத்தங்களினாலும், என் இருதயத்தை நான் நிறைத்துக் கொள்ளாமல், கிறிஸ்வின் நறுமணம் வீசுகின்றவனாக வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 2:15