புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 06, 2023)

குறை யாரிடத்தில் உண்டு

யாக்கோபு 1:26

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்


தன் வீட்டிற்கு அருகில் புதிதாக குடியேறிய மனிதனானவனோடு நட்பாக பழகி வந்த விசுவாசியானவன், அந்த மனிதனானவன் பெரும் கல்விமானாக இருந்ததினால், அவனுக்குள் கல்வியின் பெருமை இருக்கின்றது என்ற எண்ணம் இந்த விசுவாசியானவனின் உள்ளத்திலே இருந்தது என்பதை குறித்து நேற்றைய தியானத்தில் பார்த்தோம். அந்த மனிதனானவனிடம் கல்வியைக்குறித்த பெருமை இருக்கின்றதென்பதைவிட, இந்த விசுவாசியானவனின் உள்ளத்தில் தான் தான் அவனைப் போல கல்வி கற்கவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை இருக்கின்றது என்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும். அது மட்டுமல்ல, சீக்கிரமாக மற்றவ னை நியாயந்தீர்ப்பதும், காரியங்களை நிதானித்து அறியும்படிக்கு தேவையான நீடிய பொறுமையும் இந்த விசுவாசியானவனின் மனதில் இல்லாதிருந்தது. ஒருவேளை நாம் அறிந்தவர்கள் தங்கள் கல்வி, செல்வம், சமுக அந்தஸ்துகளை குறித்து பெருமை பாராட்டிக் கொண் டிருக்கலாம். அவை யாவும் அழிந்து போகும் காரியங்கள் என்று நாம் உண்மையாக உள்ளத்தில் ஏற்றுக் கொள்வோமாக இருந்தால், அவைகளை குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மற்றவர்களு டைய வாழ்க்கையிலுள்ள மாம்சத்தின் இச்சைகளை குறித்து மனிதர் களின் குறைகளை குறித்து சம்பாசிக்கவும், அவர்களை நியாந் தீர்க்க வும்; முந்திக் கொள்கின்றார்கள். இவர்கள் மற்றவர்களின் குறைகளை பேசுவதினால் தங்கள் மாம்சத்தின் இச்சையை நிறைவேற்றுகின்றார் கள். அது மட்டுமல்லாமல், தாங்கள் நீதிமான்கள் என்னும் பெருமை இவர்கள் உள்ளத்திலே குடிகொண்டிருக்கின்றது. பிரியமானவர்களே, மற்றவர்களின் வாழ்க்கையிலே இருக்கும் குறைகளை நாம் சுட்டிக் காட்டுவதால், நாம் நீதிமான்களாக மாறிவிடுவதில்லை. நாம் மற்றவர் களை குறித்தே விமர்சித்துக் கொண்டிருப்போமானால், தேவன் முன்னிலையிலே நாம் நாவடகமற்றவர்களாக காணப்படுவோம். ஒரே நாவி னாலே 'நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம். தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதி த்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.' என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது.

ஜெபம்:

உம்மை துதிக்கும் புதிய பாடலை என் நாவில் தந்த தேவனே, என் நாவினால் நான் புறங்கூறாமல், வாழ்வு தரும் நன்மையான வார்த்தைகளை பேச சுத்தமுள்ள இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிரசங்கி 5:1-2