புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 04, 2023)

கிறிஸ்துவின் கிரியைகள்

யோவான் 14:12

என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.


இயேசு கிறிஸ்து செய்த கிரியைகளை நடப்பிக்க வேண்டும் என்கின்ற வாஞ்சை மனிதர்களுடைய மனதிலே உண்டு. 'என்னை விசுவாசி க்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைக ளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.' என்று ஆண் டவர் இயேசு கூறியிருக்கின்றார். எனவே, அவரைப் போல, அற்புத் தங் கள், அடையாளங்களை வெளியரங்கமாக செய்து, மனிதர்களை தொட்டு, நோய்களை குணமாக்கி, அசுத்த ஆவிகளை துரத்தி, மரித்தவர் களை உயிர்ப்பித்து, பெரும் பெரும் காரியங்களை நடப்பிக்கு ம்படி மனிதர்கள் எண்ணங் கொள் கின்றார்கள். இதுதான் கிறிஸ்து வின் கிரியையா? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அவைகளை யும் செய்தார். ஆனால், அவர் வந்த நோக்கம் மேன்மையானது. இந்த உலகத்திலே, மனிதர்கள் நோய்கள் நீங்கி, செல்வத்தை பெருக்கி, பூமியிலே சுபீட்சமாய் வாழும்படி அவர் இந்த பூமிக்கு வரவில்லை. மாறாக, இந்த உலகம் அநித்தியமானதும், அழிவுக்குரியதும் என்பதை உணர்ந்து, நித்திய ஜீவனுக்குரிய மேன்மையானவைகளை தேடும்படி, மனித குலத்திற்கு வழிகாட்டும்படி வந்தார். அவர், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். ஆனால், இன்று கிறிஸ்து செய்த கிரியைகளை செய்கின்றோம் என்று கூறும் சிலர், இந்த உலகத்தின் மேன்மைகளை தங்களுடையதாக்கிக் கொள்கின்றார்கள். கிறிஸ்துவைப் போல, எளிமையான வாழ்க்கை வாழா மல், தங்களுக்கென்று மாளிகைகளையும், மகுடங்களையும் ஏற்படுத் திக் கொள்கின்றார்கள். கிறிஸ்துவானவர், இந்த உலகித்திலுள்ள பொரு ட்களை தமக்கென்று சேர்த்து வைத்தாரா? பூமியிலே உங்களு க்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துரு வும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடு வார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர் த்து வையுங்கள்; என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார்;. எனவே, ஒருவன் கிறிஸ்துவைப் போல வாழாமல் எப்படி கிறிஸ்து செய்த கிரியைகளை செய்ய முடியும்? எனவே, கிறிஸ்துவில் விசுவாச முள்ளவர்கள் முதலாவதாக, அவரைப் போல வாழ்ந்து, பிதாவானவர் சொல்லும் கிரியைகளை தங்கள் வாழ்வில் நடப்பிக்கின்றார்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, நான் சுயமாய் எந்தக் கிரியையும் செய்யாமல், பிதவாவின் சித்தப்படி செய்கின்றேன் என்று கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நான் பின்பற்றி வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 4:34