புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 02, 2023)

பூமிக்கு வந்த பரிசுத்தர்

எபேசியர் 2:8-9

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;


பாவத்திலே வாழும் மனிதர்களின் பாவங்களை பாராட்டும்படியாக ஆண் டவராகிய இயேசு இந்தப் பூமிக்கு வரவில்லை. பாவ சேற்றில் விழுந் திருக்கும் மனிதர்களை கண்டித்து, தண்டிக்கும்படியாக தன்னை தாழ் த்தி இந்த உலகிலே மனிதனாக ரூபம் எடுக்கவில்லை. மாறாக, பாவ த்தின் அடிமைத்தனத்திலே அகப்ப ட்டு, சிக்கி தவிக்கும் மனிதர்களுக்கு, பாவத்தின் பிடியிலிருந்து விடுதலை யடையும் வழியை ஏற்படுத்தி, அதை அவர்களுக்கு காட்டும்படியாக இந் தப் பூமிக்கு வந்தார். தேவ பக்தியு ள்ளவனென்று சொல்லிக் கொள் ளும் எந்த மனிதனும் இதை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். ஆனா லும், தேவனாகிய கர்த்தர் அறிந்த வர்கள் என்று சொல்லிக் கொள் ளும் மனிதர்களும், சில வேளைகளிலே, தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணி விடுகின்றார்கள். இவர்கள் தேவ பக்தியுள்ளவர்களா? இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலய த்துக்குப் போனார்கள்; ஒருவன் மக்கள் மத்தியிலே சிறப்பு குடிமகன் என்று கருதப்பட்ட பரிசேயர்; என்ற குழவைச் சேர்ந்த வன். மற்றவனோ ஆயக்காரன். அவன் ரோமருக்கு வரிவசூலிப்பவனாக இருந்ததினாலே, சமுதயாததினாலே, துரோகி என்றும், அநியாயக்காரன் என்றும், பறிகா ரன் என்றும் கருதப்பட்டான். பரிசேயன் நின்று: நான் இந்த ஆயக்கார னைப்போல பாவியாக இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வார த்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தன் கிரியைகளை குறித்து மேன்மை பாராட்டினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்க ளையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித் துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என் றான். அந்தப் பரிசசேயனல்ல, ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டவனா ய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல் லுகிறேன்; என்று ஆண்டவராகிய இயேசு கூறினார். பிரியமானவர்களே, நீங்கள் தேவ பக்தியுள்ளவர்களா? அப்படியானால், உங்கள் கிரியைக ளைக் குறித்து மேன்மைபாராட்டாமல், பாவிகளை நியாயந்தீர்க்காமல் அவர்களை இரட்சித்து பரிசுத்தமாக்கும் தேவ கிருபையைக் குறித்து மனதார மேன்மைபாராட்டுங்கள்.

ஜெபம்:

என்னை பரிசுத்தமாக்கும் பரிசுத்தரே, தகுதியற்ற என்மேல் உம்முடைய கிருபையை பொழிந்த தேவனே, நான் என் கிரியைகளையல்ல உம்முடைய கிருபையை மேன்படுத்தும்படி, உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 12:9