புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 28, 2023)

வாழ்வில் ஏற்படும் சிறிய பிளவுகள்

நீதிமொழிகள் 4:23

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினி ன்று ஜீவஊற்று புறப்படும்.


தன் வீட்டின் பின் புறத்தின் வேலியிலே சிறிய பிளவு ஏற்பட்டிருக்கின்றது என்று அறிந்து கொண்ட வீட்டின் சொந்தக் காரன், சிறு நரி கூட உட்புக முடியாத ஒரு சிறிய பிளவு ஏற்பட்டிருக்கின்றது. அதை பின்பு பார்த்து கொள்வோம் என்று கூறிக் கொண்டான். ஒரு சில கிழமைக ளுக்கு பின்னர், ஒரு இரவிலே, அவனுடைய வீட்டின் பிற்புறத்தின் வழி யாக சில வனவிலங்கள் உட்புகுந்து, அவன் வைத்திருந்த தோட்டத்தை அழி த்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்று விட்டன. பின் வேலியில் ஏற்ப ட்ட சிறிதான பிளவை பாராமுகமாக விட் டதால் வந்த பின்விளைவைப் பாருங் கள். வேலி திறந்திருக்கின்றது, உள்ளே வந்து தோட்டத்தின் காய்கறிகளை சாப் பிடுங்கள் என்று வனவிலங்குகளுக்கு விசேஷpத்த அழைப்பிதழ் கொடுக்கத் தேவையில்லை. எங்கே வேலி திறந்திருக்கின்றதோ, அது வனவிலங்கு களுக்கு அழைப்பிதழாகவே இருக்கின்றது. அந்த பிளவுகள் வழி யாக வனவிலங்குகள் உட்புகுந்து விடும். அதுபோலவே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும், ஏற்படும் சிறி தான பிளவுகளை நாம் பாராமுகமாக விட்டுவிடும் போது, அவைக ளிளாலே பெரிதான பின்ன டைவுகள் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிளவுகள், எதிராளி யானவனாகிய பிசாசானவனிற்கு அழைப்பிதழாக இருக்கின்றது. திருடன் கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேறறொன்றுக்கும் வரான் என்பதை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம். அதை அறிந்திருந்தும், நம் வாழ்வை சுற்றியிருக்கும் வேலியாகிய வரையறைகளில் சிறிய பிளவு களை ஏற்படுத்தும் போது, நம் வாழ்க்கையை கொள்ளையடிக்கும் படிக்கு, திருடனை ஊக்குவிக்கின்றவர்களாக காணப்படுவோம். கர்த் தருடைய பிரமாணங்கள் நம் வாழ்வின் பாதுகாப்பின் வேலியாக இரு க்கின்றது. அவைகளின் ஒன்றையாகிலும் நம்மைவிட்டு அகற்றி விடக் கூடாது. அனுதினமும் தேவ வார்த்தைகளை தியானித்து, ஜெபம் செய்யாத விசுவாசியானவன், தன் வாழ்வின் சிறிய பிளவுகள், சத்துரு வானவன் உட்புகும் பெரிதான திறப்புக்களாக மாறிவிட இடங்க கொடுக் கின்றான். எனவே, எப்போதும் விழிப்புள்ளவர்களாக இருந்து, வேத பிரமாணங்களின் வழியிலே நம்முடைய வாழ்க்கையை வாழ வேண்டும். வலது புறமாகவோ, இடது புறமாகவோ சாயாமல், ஆண்டவர் இயேசு காட்டிய வழியிலே நாம் கருத்துதோடு வாழ்வதற்கு நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

நித்திய வாழ்வின் வழியை எனக்கு காண்பித்த தேவனே, உம் முடைய வேதத்தின் மகத்துவங்களை நான் மறந்து போகாமல், நீர் காட்டிய ஜீவ வழியிலே நான் நடக்கும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:10-13