புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 27, 2023)

துன்பங்கள் சூழ்ந்து கொள்ளும் போது

யோவான் 15:5

இயேசு சொன்னார்: என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.


நோய்வாய் பட்டிருக்கும் மனிதனொருவன், ஏதோ காரணத்தினாலே, தான் வைத்தியரிடம் போக மாட்டேன் என்று மிகவும் பிடிவாதமுள்ளவனாக இருந்தான். நான் அங்கு சென்றால், அவர் சொன்னத்தைதான் திரும்ப வும் சொல்லப் போகின்றார். கொடுத்த கசப்பான மாத்திரைகளையே இன்னும் கூட்டிக் கொடுக்கப் போகின்றார் என்று தன் தீர்மானத்தை நியாயப்படுத்திக் கொண்டான். கேட் பதற்கு இது யாதார்த்தமற்றதாக இருக்கலாம், ஆனால் உண்மை யிலேயே, சில மனிதர்கள், தங் களுக்கு உண்டான விசுவாசத்தி னாலல்ல, வைத்தியரோடு நல்ல உறவு இல்லாததினாலே, அவரிம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து, முடிவிலே மருத்துவ மனைக்கு துரிதமாக கொண்டு செல்லப்படுகின்றார்கள். ஒருவேளை இத் தகைய செயற்பாட்டின் முடிவாக அந்த மனிதனாவன் இந்த உலகத் தைவிட்டு கடந்து செல்ல வேண்டியும் ஏற்படாலம். ஆனால், ஒரு விசுhசி யானவன், தன் ஆன்மீக நோயை குணப்படுத்தாமல், பரம வைத்தி யராகிய இயேசுவிடம் செல்ல மாட்டேன், அதாவது, அவர் சொன் னத்தை செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பானாக இருந் தால், அவனுடைய முடிவு என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பாரு ங்கள். சரீர நோய்கள் ஏற்படும் போது, சிலர் விசுவாசத்தினால் தெய்வீக சுகம் உண்டாகும் என்று வைத்தியரிடம் செல்லாமல் இருக்கின்றார்கள். அது அவர்களுடைய விசுவாசம் என்று கூறலாம். ஆனால், வாழ்க்கையிலே ஆன்மீக நோய் ஏற்படும் போது, ஒருவன் இயேசு சொன்னத்தை செய்யமாட்டேன் என்று கூறுவானாக இருந்தால், அவன் விசுவாசமற்றவனாக மாறிவிடுகின்றான். 'பிணியாளிகளுக்கு வைத் தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்' என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். பிரியமான வர்களே, நம்முடைய வாழ்க்கையிலே உண்டாகும் துன்பங்கள், துயரங்கள், நம்முடைய மீறுதல்களினாலோ அல்லது, மற்றவர்களுடைய மீறுதல்களினாலோ உண்டாகலாம். யார்தான் காரணமாக இருந்தாலும், ஆண்டவர் இயேசு அல்லாமல் ஆறுதல் இல்லை. எனவே, துன்பத்தின் நாட்களிலே ஆராதனைக்கு செல்ல மாட்டேன். ஜெபிக்க மாட்டேன். ஜீவ வனத்தை தியானம் செய்ய மாட்டேன் என்று தேவனைவிட்டு தூரம் சென்று விடாமல், இன்னும் அதிகமாக அவரை கிட்டிச் சேருங்கள்.

ஜெபம்:

துன்பத்தின் பாதையில் நான் நடக்கும் போது என்னை உயிர் பிக்கின்ற தேவனே, வேதனைகளின் நேரங்களிலே நான் உம்மை மறந்து போய்விடாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28