புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 10, 2023)

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்

யாக்கோபு 4:7

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.


வாழ்க்கையிலே வேண்டப்படாத துன்பங்களும், பிரச்சனைகளும். பிசாசின் சோதனைகளும்; பெருகி கொண்டே இருக்கின்றது. இவற்றிற்கு முடிவில்லையா என்று ஒரு விசுவாசியானவன் தன் மேய்ப்பனானவரிடம் கூறிக் கொண்டான். அந்த விசுவாசியானவனை அநேக வருடங்கள் அறிந்திருந்த அந்த அனுபமிக்க மேய்ப்பரானவர், அவனை நோக்கி: மகனே, உன் குடும்பத்தை, உன் தகப்பனானவருடைய நாட்களிலிருந்து நான் அறிந்திருக்கின்றேன். நீ இப்போது ஒரு தகப்பனாக இருக்கின்றாய். ஆனால், உன் வாழ்க்கையிலே இன்னும் கீழ்படி வில்லாத தன்மைகள் இருக்கின்றதே. நீ உன்னை மாற்றிக் கொள்ளும்வரை நீ பிசாசுக்கு எதிர்த்து நிற்க முடியாது என்று கூறினார். ஆம் பிரியமான சகோதர சகோ தரிகளே, ஒருவன் முதலாவதாக, தேவ னுக்கு கீழ்படிவுள்ளவனாக வாழ வேண் டும். அதாவது, தேவனானவர், முகமு கமாய் வந்து ஒவ்வொரு நாளும், நீ இப் படி செய்ய வேண்டும் என்று சொல்லப் போவதில்லை. ஆனால், அவர் ஒழுங்குகளை நியமித்திருக்கின்றார். தம்முடைய வார்த்தைகளை நமக்கு கொடுத்திருக்கின்றார். ஞாயிறு தோறும் தேவ செய்தியை கொடுக்கின்றார். அவற்றின்படி நடப்பதற்கு நாம் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். நாம் தேவனுக்கு கீழ்படிவு ள்ளவர்களாக நடந்து, பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் போது, அவன் உங் களை விட்டு ஓடிப் போவான். கீழ்படிவு இல்லாத இருதயமுடையவர்க ளிடத்திலே, பெருமை தங்கி இருக்கும். தேவன் பெருமையுள்ளவர்க ளுக்கு எதிர்த்து நிற்கிறார். பெருமையுள்ளவர்கள் பிசாசானவனை சார் ந்திருக்கின்றார்கள். அதனால், பிசாசானவன், அவர்களுக்கு பாராட்டுதல் கொடுக்கப் போவதில்லை. மாறாக, அவன் கொல்லவும் அழிக்கவு மேயன்றி வேறொன்றுக்கும் வாரான். கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று பரிசுத்த வேதாகமம் நமக்கு எச்சரிப்பை கொடுக்கின்றது. மனுஷர்கள் கீழ்படியாதவர்களாக காணப்படுவார்கள். இவர்கள் தேவனுடையவர்களல்ல. கீழ்படிவில்லாதவன் கிறிஸ்துவுக்கு பிரியமுள்ளவனாக இருக்க முடியாது. பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் மேலானது. எனவே, நாம் முதலாவதாக தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய நமமை ஒப்புக் கொடுப்போமாக. தேவனுடைய சர்வாயுதவர்க் கத்தை தரித்தவர்களாக பிசாசானவனுக்கு பயப்படாமல் எதிர்த்து நிற்போம். அவன் உங்களைவிட்டு ஓடிப் போய்விடுவான்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிக்கும் தேவனே, உம்முடைய வார்த்தைக்கு அறிந்தோ அறியாமலோ எதிர்த்து நிற்காதபடிக்கு, மனப் பிரகாசமுள்ள கண்களை தந்து என்னை நடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமு 15:22

Category Tags: