புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 07, 2023)

தேவ நியமங்கள் காலத்தோடு மாறுவதில்லை

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


பயிர்ச்செய்கையின் உபயோகத்திற்காக, ஊரிலுள்ள விவசாயிகள், மழைத் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு அணை கட்டி வைத்திருந்தார் கள். ஒரு நாள் தண்ணீரானது அணையை உடைத்துக் கொண்டு, வெள் ளமாக புரண்டோடி, அந்த ஊரிருள்ள பயிர்செய்கைகள் யாவற்றையும் பாழாக்கி போட்டது. உபயோகமுள்ள தண்ணீர் அதன் எல்லையை மீறும் போது, பாழக்கும் வெள்ளமாக மாறிவிட்டது. பாடசாலைக்கு செல் லும் பிள்ளைகளை, அந்த பாடசாலையின் மாணவர்கள் என்று அழை க்கின்றோம். ஒரு மாணவனானவன், அந்த பாடசாலையின் எல்லையை மீறி செயற் படும் போது, அவனை பாடசாலையிலிருந்து வெளியேற் றுகின்றார்கள். அவன் பிள்ளையாக இருக்கின்ற போதிலும், அவன் இப் போது அந்த பாடசாலையின் மாண வன் என்று அழைக்கப்படுவதில்லை. இவ்வண்ணமாகவே, பெற்றோர், புருஷன், மனைவி, பிள்ளைகள், வாலி பர்கள், விதைவைகள், வயோதிபர்கள், மூப்பர்கள், ஊழியர்கள், விசு வாசிகள் யாவருக்கும் பரிசுத்த வேதாகமம் எல்லை வகுத்திருக்கின்றது. உலகமானது நாகரீகம் அடையலாம். நடை உடை பாவனைகள் கால த்திற்கு காலம் மாறுபாடடையலாம். ஆனால், தேவனானவர் போட்ட எல்லைகள் மாறுவதில்லை. மனிதன் வெளிதோற்றத்தை பார்க்கின்றான். ஆனால் தேவனோ இருதயங்களை ஆராய்ந்தறிவதால், மனிதனுடைய சிந்தை இன்னதென்று அவர் அறிந்திருக்கின்றார். ஒரு புருஷனாவன், இந்த காலத்திற்கு ஏற்றபடி, தன் மனைவியை அன்பு செய்கின்றேன் என்று பூக்களாலும் பரிசுப் பொருட்களாலும் ஊருக்கு காண்பிக்கலாம். ஆனால், அவன் இருதயத்திலே, வேறு ஆசைகளை வைத்திருப்பானா னால், அவன் அவளுடைய புருஷன் என்று அழைக்கப்படுவதற்குரிய தகு தியை இழந்து போகின்றான். இவ்வண்ணமாகவே, ஒவ்வொரு நபரும், அந்தந்த பருவத்திலே, கர்த்தருக்கு பயந்து, அவருடைய வார் த்தைகளின் ;படி செய்கின்றவனாக இருக்கும் போது, அவன் உப யோகமுள்ள தண்ணீரைப் போல இருப்பான். ஆனால், அவன் தன் நிலையை உண ராமல், காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் போது, அவன் பாழாக்கும் வெள்ளம் போல மாறிவிடுகின்றான். பிரிய மானவர்களே, இந்த உலகத்தின் வேஷம் கடந்து போகின்றது. எனவே, காலத்திற்கேற்ப, இந்த உலகத்தின் வேஷத்தை தரித்துக் கொள்ளாமல், கர்த்தர் நியமித்த ஒழுங்குக்கு கட்டுப்பட்டிருங்கள். கர்த்தர் உங்ளைக் குறித்து போட்ட எல்லையை மீறாமல், அதற்குள் கட்டுப்பட்டிருங்கள்.

ஜெபம்:

காலங்களை அறிந்த சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்மு டைய நியமங்கள் மாறாதவைகள். உலக போக்கிற்கு நான் என்னை ஒப் புக்கொடுத்து, உம்முடைய வழியை விட்டு விலகாதபடி என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2