புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 04, 2023)

அறிவுக்கெட்டாத தேவ அன்பு

எபேசியர் 3:19

அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும்,


தெருவிலே இரண்டு மனிதர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த வேளையிலே, அவ்விடத்தை கடந்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, கலகம் எழும்பாதபடிக்கு, அவர்களை அணுகி, அவர்களுக்கு அறிவரை கூறி, அமைதிப்படுத்த முயன்றார். ஆனால், அவர்களோ, அதற்கு செவி கொடுக்காமல், அசட்டை செய்தார்கள். வாக்குவாதம் பெருகிக் கொண்டு போகும் போது, நீங்கள் எப்போது சட்டம் குறித்த எல்லையை தாண்டுகின்றீர்களோ, அப்போது நான் உங்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று எச்சரிப்பை வழங்கினார். இவ்வ ண்ணமாக, இவ்வுலகிலே மனித ர்கள் பல எல்லைகளை ஏற்படு த்தியிருக்கின்றார்கள். தேவனா கிய கர்த்தர், சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப் படுத்தினார் (நீதி 8:29). மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிரு க்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடி யிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார் (அப்போஸ்தலர் 17:26). கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவ ந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு வஸ்திர மாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தி னபோதும், தான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டார். (யோபு 38:8-11) இவ்வண்ணமாவே தேவ னானவர் எல்லாவற்றிற்கும் எல்லைகளை குறித்தார். ஆனால், பாவத் தில் விழுந்த மனிதகுலம், பாதாளத்திலே அழிந்து நித்திய நித்தியமாய் மாண்டு போகாமல், தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசுவை நமக் காக தந்து, தம்முடைய எல்லையற்ற அன்பை நம்மேல் பொழிந்திரு க் கின்றார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரம்? யுhரால் அதை அளக் கக்கூடும்? அவ்வளவாய் அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவரு டைய கிருபையை தினமும் பொழிகின்றார். மேற்குக்கும் கிழக் குக்கும் உள்ள தூரத்தை அளவிட முடியுமோ? அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். பிரியமான வர் களே, தேவ அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்ன தென்று உணர்ந்து, அந்த அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்து கொள்ளும்படி தேவ அனுக்கிரகத்திற்காக வேண்டுதல் செய்யுங்கள்.

ஜெபம்:

எல்லையில்லாத அன்பை என்மேல் பொழிகின்ற தேவனே, அந்த பேரன்பை நான் உணர்ந்து, வேதனையுண்டாக்கும் வழிகளை விட்டுவிலக எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:1-13