புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 03, 2023)

இம்மட்டும் வா, மிஞ்சி வராதே

சங்கீதம் 74:17

பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினீர்; கோடை காலத்தையும் மாரி காலத்தையும் உண்டாக்கினீர்.


கர்த்தர் செய்த உபகாரங்களை யாரால் எண்ணக்கூடும்? அவர் நம் வாழ்வில் செய்த நன்மைகளை யாரால் விவரிக்க கூடும்? ஆண்டவ ராகிய இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன் என்று ஆண்டவராகிய இயேசுவின் சீஷனாகிய யோவான் கூறினார். கருப் பொருளாவது, அவருடைய நன்மை கள் எண்ணற்றது. அவற்றில் சில வற்றை நாம் நம் கண்களால் கண் டிருக்கிறோம், வேறு சிலவற்றை செவி களால் கேட்டிருக்கின்றோம், இன்னும் சிலவற்றை நாம் நம் வாழ்வில் அனுபவித்திருக்கின்றோம். அவைகள் கூட எண்ண முடியாதவைகள். ஆனாலும், ஆபத்துக் காலத்திலே தேவ பிள் ளைகள் அவற்றை மறந்து போய்விடுகின்றார்கள். வாழ்க்கைப் படகில் மோதும் அலைகளை காணும் போது, தங்கள் வாழ்வில் அலையலை யாய் வந்த எண்ணற்ற தேவ ஈவுகளை உணரமால், தங்கள் வாய்க ளினால், அவிசுவாசததிற்குரிய வார்த்தைகளை அறிக்iயிடுகின்றார் கள். ஒரு சமயம், ஆண்டவர் இயேசுவின் சீஷர்கள் இருந்த படவு அலை களினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார். அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்து போகிறோம் என்றார்கள். ஆண்டவரிடத்தில் எண்ணற்ற அற்புதங்களை யும், அதிசயங்களையும் கண்ட அவர்கள், ஒரு கணப்பொழுதிலே யாவ ற்றையும் மறந்து மரண பயத்திற்குள்ளானார்கள். அப்பொழுது ஆண் டவர் இயேசு எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று. பிரியமானவர்களே, இம்மட்டும் வா, மிஞ்சி வராதே. என்று கடல் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது (யோபு 38:11) என்று அவைகளுக்கு எல்லையை வகுத்த சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மோடிருக்கின்றார். இரவுக்கு எல்லை விடியலாய் இருப்பது போலவும், மாரிகாலத்தின் எல்லை கோடையாக இருப்பது போலவும், நம் வாழ்வை நோக்கி, வரும் சவால்களுக்கும், உபத்திரவங்களுக்கும் ஒரு எல்லை உண்டு. அவை நம்மை மேற்கொள்ள முடியாது. ஏனெனில், உலகத்தை ஜெயித்தவர் நம்மோடு இருக்கின்றார். எனவே, திடன் கொள்ளுங்கள்!

ஜெபம்:

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவனே, துன்பங்கள், வேதனைகள் சூழும் நேரத்திலே, உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருக்க எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:1-13