புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 30, 2023)

மனதைக் கடினப்படுத்திக் கொள்ளாதிருங்கள்

மத்தேயு 23:37

நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.


ஒரு சமயம், ஆண்டவராகிய இயேசு, தம்முடைய ஜனங்களை நோக்கி: தேவனுடைய தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனு ப்பப்பட்டவர்களைக் கல்லெறிகின்றவர்களே. கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மன தாயிருந்தேன்; உங்களுக்கோ மன தில்லாமற்போயிற்று என்று கூறி னார். இன்றைய நாட்களிலே, வாழும் நாமோ, தேவனுக்கு பிரிய மாக இருந்த ஆபேலை, அவன் சகோதரனான காயீன், எரிச்சலினா லே கொன்று போட்டான் என் பதை வாசிக்கும் போது, அச்செயல் வன் முறையென்றும், மனித அபிமானம் இல்லாத கொடூரமான தீயசெயலென்றும், நாங்களோ அப்படி செய்ய மாட்டோம் என்றும் நாங்கள் தீர்க்கதரிகளுடைய வார்த்தைகளை கேட்கி ன்றவர்களாக இருக்கின்றோம் என்றும் திட்டமாக கூறிவிடுகின்றவர்க ளாக இருக்கின்றோம். இப்படியாக ஆபேல் முதல் சகரியா வரை க்கும் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள். தேவன் அவர்கள் வழியாக, தம்முடைய ஆலோசனைகளையும்;, அறிவுரைகளையும், எச்சரிப்புக்க ளையும் ஜனங்களுக்கு அனுப்பினார். அதை கேட்டவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்களை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் செய் தார்கள். எத்தனையோ முறை தேவனானவர், தம்முடைய ஜனங்களை தம்மிடம் கூட்டிக் சேர்க்க மனதாயிருந்தும், ஜனங்களோ தங்கள் மனதை கடினப்படுத்திக் கொண்டார்கள். அதுபோலவே, இன்று, தேவனுடைய வார்த்தையை கேட்பதற்கு பலர் மனதற்றவர்களாகவே இருக்கின் றார்கள். பாடல்கள் பாட, தங்கள் மனதிற்கேற்ற பிரசங்கம், தேநீர் வேளை, செயற்திட்டங்கள் என்று இவைகளை நாடுகின்றார்கள். ஆனால், மனந்திரும்புதல், பாவமன்னிப்பு, பரிசுத்தவாழ்வு, தேவ ஆலோ சனைகள், தேவனுடைய சிட்சை, தேவ எச்சரிப்புக்களை கூறி உண் மையாக வேதமானது பேசப் படும் போது, அவர்களுடைய சொந்த மன சாட்சி அவர்களை குற்றப் படுத்துவதால், அதை கேட்க மனதி ல்லாமல் தங்கள் காதுகளை அடைத்து, தங்களை அந்த இடத்திலிருந்து அகற்றிக் கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, தேவன்; தம்முடைய ஜனங்க ளகிய நம்மையும் தம்மோடு சேர்த்துக் கொள்ள மனதுள்ளவராகவே இரு க்கின்றார். நீங்கள் தேவனோடு சேர்ந்து கொள்ளும்படி மனதுள்ளவர் களாக இருக்கின்றீர்களா?

ஜெபம்:

என்னை தெரிந்து கொண்ட தேவனே, உம்முடைய சத்தத்தை கேட்கும் போது, என் இருதயத்தை நான் கடினப்படுத்தாமல், உம்முடைய வார்த்தைக்கு கீழ்படியும் இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 3:7-8